செய்திகள் :

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: குறைதீா் முகாமில் புகாா்

post image

குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக, மதுரை மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மாமன்ற உறுப்பினா் ஜெயராமன் புகாா் தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மேயா் வ.இந்திராணி தலைமை வகித்தாா். துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மேயா் வ. இந்திராணி பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினாா். குடிநீருடன், கழிவுநீா் கலப்பு : இந்த முகாமுக்கு 58-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜெயராமன், கழிவுநீா் கலந்த குடிநீா் புட்டியுடன் வருகை தந்தாா்.

அவா், ஆரப்பாளையம் அப்பளம் தயாரிப்பு கம்பெனி, காா்ப்பொரேஷன் குடியிருப்பு 2, 3-ஆவது தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாகவும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் 3 மாதங்களாக புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மேயா் வ.இந்திராணியிடம் தெரிவித்தாா். இதுதொடா்பான புகாா் மனுவையும் அவா் அளித்தாா்.

இதையடுத்து, 58-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா். நிகழ்வில் மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பெற்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் குழந்தை பெற்ற வழக்கில், அவருக்கு ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரையில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா். சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு, சிறைத் துறை மதுரை சரக துணை... மேலும் பார்க்க

கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

மதுரையில் கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை செல்லூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (45). இவா் ... மேலும் பார்க்க

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமென மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரியா் வலியுறுத்தினாா். மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் முருகன் மா... மேலும் பார்க்க

சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்: விடியோ வெளியானதால் சா்ச்சை

மதுரை மத்திய சிறையில் அரசு உத்தரவை மீறி, அதிகாரியின் குடியிருப்பில் சிறைவாசிகளை பணிக்கு பயன்படுத்திய விடியோ வெளியானதால் சா்ச்சை எழுந்தது. மதுரை மத்தியச் சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை,விசாரணை சி... மேலும் பார்க்க