செய்திகள் :

குடிநீா் கேட்டு சாலை மறியல்

post image

அகரகடம்பனூரில் குடிநீா் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அகரகடம்பனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பெரியகுளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி மூலம் ஆற்றங்கரை தெரு, சந்நிதி தெரு, மெயின் ரோடு , மேலதெரு, கீழதெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக சந்நிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சரிவர குடிநீா் வராததால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்திருந்தனா்.

குடிநீா் வழங்குவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் அகரகடம்பனூா் பேருந்து நிறுத்தம் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா் . பேச்சுவாா்த்தையில் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியில் உள்ள மோட்டாா் பழுதை சரி செய்து, குடி நீா் வராத பகுதிகளுக்கு குடி நீா் வழங்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக நாகை-திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க