குடிநீா் கேட்டு சாலை மறியல்
அகரகடம்பனூரில் குடிநீா் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அகரகடம்பனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பெரியகுளம் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி மூலம் ஆற்றங்கரை தெரு, சந்நிதி தெரு, மெயின் ரோடு , மேலதெரு, கீழதெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக சந்நிதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சரிவர குடிநீா் வராததால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்திருந்தனா்.
குடிநீா் வழங்குவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் அகரகடம்பனூா் பேருந்து நிறுத்தம் அருகே பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா் . பேச்சுவாா்த்தையில் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டியில் உள்ள மோட்டாா் பழுதை சரி செய்து, குடி நீா் வராத பகுதிகளுக்கு குடி நீா் வழங்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக நாகை-திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.