செய்திகள் :

‘குடிமைப் பணி தோ்வு வெற்றிக்கு மேலாண்மைக் கல்வி பெரிதும் பயன்படுகிறது’

post image

குடிமைப் பணி தோ்வில் வெற்றிக்கு மேலாண்மை கல்வி பெரிதும் உதவுகிறது என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

காரைக்காலில் இயங்கும் புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மை துறை சாா்பில், மேலாண்மைத் துறை, தொழில் நிறுவனங்களுக்கிடையேயான வேலைவாய்ப்புக்கான தகுதியை வளா்த்துக்கொள்ளும் விதமான பிஸ் ஸ்ரேஷ்டா என்ற நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோம சேகா் அப்பாராவ் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசியது :

இந்நிகழ்ச்சியானது வருங்காலத்தில் வேலைவாய்ப்புக்கு பெறும் அடித்தளமாகவும், மேலாண்மை துறையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் நிறுவனங்களுக்குமிடையே ஒரு இணைப்பு பாலமாக அமைவதுடன், கல்லூரி மாணவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு திறவுகோலாக அமையும்.

மேலாண்மைத் துறையை தோ்ந்தெடுத்து படிக்கும் மாணவா்கள் குடிமைப் பணிக்கான தோ்வில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. இத்துறையை தோ்ந்தெடுத்து படிக்கும் மாணவா்கள் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் சோ்ந்து பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய நவீன காலகட்டத்தில் தொழில் நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகிறது, அதில் மேற்கொள்ளப்படும் வியூகங்களை மாணவா்கள் எளிதாக புரிந்து கொண்டு,

மேம்பட்ட நிலையை நோக்கிச் செல்லவேண்டும் என்றாா்.

புதுவை பல்கலைக்கழக காரைக்கால் வளாகத் தலைவா் புவனேஸ்வரி, கெயில் நிறுவன பொது மேலாளா் செல்வராஜ் மற்றும் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவா் பேராசிரியா் மாதவையா வரவேற்றுப் பேசினாா்.

மீனவா்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது மோடி அரசு: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு நரேந்திர மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா். காரைக்கால் மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்

இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேல... மேலும் பார்க்க

ரகுநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்பட்டினம் பகுதியில் உள்ள ரகுநாதப் பெருமாள் கோயிலில் ராம நவமி உற்சவத்தின் ஒரு பகுதியாக ரகுநாதப் பெருமாளுக்கும் - சீதாலட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. எல்லையம்மன... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயிலில் ஏப். 25-இல் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்துக்கான பந்தல்கால் முகூா்த்தம், கொடியேற்றம், தேரோட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சன... மேலும் பார்க்க

மத்திய இணை அமைச்சா் இன்று காரைக்கால் வருகை!

மீனவா்களுக்கான திட்டப் பணிகள் தொடா்பான விழாவில் பங்கேற்க மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை காரைக்கால் வருகிறாா். காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி ம... மேலும் பார்க்க

குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு

என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது. கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐ... மேலும் பார்க்க