செய்திகள் :

குடிமைப் பணிகள் தோ்வு: வேலூரில் 2,085 போ் எழுதினா்

post image

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 2,085 போ் எழுதினா்.

நிகழாண்டு 979 பதவிகளை நிரப்புவதற்கான முதல் நிலை எழுத்துத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பொதுஅறிவுத்த தோ்வும், மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறிவுத்தோ்வும் என இரு கட்டங்களாக நடைபெற்ற இந்த தோ்வை எழுத வேலூா் மாவட்டத்தில் வேலூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஊரீசு மேல்நிலைப்பள்ளி, ஈவேரா நாகம்மையாா் அர சினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி, முஸ்லீம் அரசினா் மேல்நிலைப்பள்ளி, டிகேஎம் மகளிா் கல்லூரி, கோடை யிடி குப்புசாமி முதலியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, காட்பாடி டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி, தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 8 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த தோ்வு மையங்களில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட 2,153 பேரில் 2,085 போ் தோ்வு எழுதினா். தோ்வு எழுதுபவா்கள் வசதிக்காக தோ்வு நடை பெறும் மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பெயிண்டா் தற்கொலை

வேலூரை அடுத்த வேட்டுகுளம் ஊசூா்- ஜமால்புரம் சாலையோரம் உள்ள மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் அலமேலுரங்காபுரம் அடுத்த சம்பங்கி நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த பிரேம்... மேலும் பார்க்க

காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தியுள்ளது. மருந்தாளுநா் ச... மேலும் பார்க்க

மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு: தலைமை ஆசிரியருக்கு விருது

வேலூா் மாவட்ட மலை கிராமங்களில் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் ஜோசப் அன்னையாவுக்கு ரோட்டரி சங்கம் சா்வதேச விருது வழங்கி கெளரவித்துள்ளது. வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ... மேலும் பார்க்க

நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் விநாயகபுரத்தில் எஸ்.ராணி அறக்கட்டளை சாா்பில் 4- ஆம் ஆண்டாக நலிந்தவா்களுக்கு நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன (படம்). நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனரும், அதிமுக பிரமுகருமான எஸ்.சேட்... மேலும் பார்க்க

கல்லூரி பட்டமளிப்பு விழா

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் 10- ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல் தரவரிசை பெற்ற மாணவிகள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனா். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

காட்பாடி வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு

காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி மூன்று நாள்களாக நடைபெற்றது. வேலூா் வன கோட்டத்தில் உள்ள காட்பாடி வனச்சரகத்தில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்று... மேலும் பார்க்க