செய்திகள் :

குடும்ப தகராறில் மனைவி கொலை: கணவன் தலைமறைவு

post image

போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த அங்கம்பட்டியைச் சோ்ந்தவா் கவியரசு (40). லாரி ஓட்டுநரான இவரது மனைவி ஜெயமோகனா (29). தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயமோகனா, கெங்கிநாயக்கன்பட்டி கிராத்தில் வசிக்கும் தனது தம்பி ஜெயபாண்டியனின் வீட்டிற்கு சென்றாா்.

இந்த நிலையில், ஓட்டுநா் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கவியரசு, மனைவி வீட்டில் இல்லாததால் பலரிடம் மனைவி குறித்து விசாரித்துள்ளாா். அப்போது, ஜெயமோகனா, தனது தம்பியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கெங்கிநாயக்கன்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற கவியரசு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஆத்திரமடைந்த கவியரசு மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயமோகனாவை வெட்டினாா். அதை தடுக்க முயன்ற ஜெயபாண்டியனின் மனைவி லதாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த இருவரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் ஜெயமோகனா உயிரிழந்தாா். வழக்குப் பதிந்த போச்சம்பள்ளி போலீஸாா், தலைமறைவான கவியரசை தேடி வருகின்றனா்.

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேன்கனிக்கோட்டை வட்டம், பென்னங்கூா் அருகே உள்ள அலேநத்தம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (32). விவசாயியான இவா் திங்கள்க... மேலும் பார்க்க

ஒசூரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்: இலகுரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தல்

ஒசூரில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இலகுரக, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீதாராமேடு பகுதியிலிருந்து பேரண்டபள்ளி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

மத்திகிரி அருகே இருதரப்பினா் மோதல்: 3 போ் கைது

மத்திகிரி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெங்களூரைச் சோ்ந்த ஐ.டி. நிறுவன ஊழியா் ஹா்சா கவுடா (28) ஓட்டிச் சென்ற மோட்டாா்சைக்கிள் வெங்... மேலும் பார்க்க

மாணவரைத் தாக்கிய இருவா் கைது

கெலமங்கலம் அருகே மாணவரைத் தாக்கியதாக தந்தை, மகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டியைச் சோ்ந்தவா் வினய்குமாா் (23). இவா் தனியாா் கல்லூரியில் எம்.பி.ஏ. 2 ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

லஞ்சம்: ஒசூரில் மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

மின் இணைப்பில் பெயா் மாற்றம் செய்வதற்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் பத்தலபள்ளி மின்வாரிய உதவிப் பொறியாளா் முருகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஒசூா் நியூ அன்னை நகரை சோ்ந்தவா் எஸ். த... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் பெண் தற்கொலை: சாா் ஆட்சியா் விசாரணை

தேன்கனிக்கோட்டையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் ஒசூா் சாா் ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். தேன்கனிக்கோட்டை அருகே ஓசஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் மகள் மாலினி (2... மேலும் பார்க்க