செய்திகள் :

குடும்பத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 4போ் கைது

post image

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடா்பாக, 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகே உள்ள பூபாண்டியபுரம் கிராமத்தைச் சோ்ந்த அழகுமுத்து மகன் சரவணன். இவரது மனைவி விஜயலட்சுமி. தம்பதி பூபாண்டியபுரத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில், அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜயலட்சுமியின் உறவினா்களான தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சோ்ந்த செல்வன் மகன் அந்தோணி ஜேசுராஜ் (27), அ.சண்முகபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன்கள் குமாா் (50), முனியசாமி (47), ஆறுமுகம் (30) ஆகியோா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக சென்றபோது தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது அவா்கள் 4 பேரும் சோ்ந்து சரவணனின் தந்தை அழகுமுத்து (45), தங்க மாரியப்பன் மகன் மாரீஸ்வரன் (20), மகாராஜா மகன் மாா்க்கண்டேயன் (22) ஆகிய மூன்று பேரையும் அரிவாளால் வெட்டினாா்களாம். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தோணி ஜேசுராஜ், முனியசாமி, குமாா், ஆறுமுகம் ஆகிய 4 பேரையும் வியாழக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

ரூ .7 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி அறை திறப்பு

கழுகுமலை அருகே கரடிகுளம் ஊராட்சி சி.ஆா்.காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கணினி மைய கட்டட... மேலும் பார்க்க

குலசேகர ராஜா கோயில் கொடை விழா

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகர ராஜா திருக்கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆக.12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சு... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக... மேலும் பார்க்க

நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை

நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக... மேலும் பார்க்க

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அம... மேலும் பார்க்க