ஊழல்வாதிகளை மோடி அரசு சிறையிலடைக்கும்: நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் பாஜக கருத்து
குட் பேட் அக்லியில் அஜித்துக்கு மகனாக நடிக்க வேண்டியது யார் தெரியுமா?
குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக பிரபல இளம் நடிகர் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் முதல் மூன்று நாள்களில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதில், அஜித்துடன் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சிம்ரன் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, இளையராஜாவின் ’ஒத்த ரூபாயும் தாரேன்’ பாடலுக்கு பலரும் உற்சாகமாக நடனமாடி வருகின்றனர்.
இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகனாக கார்த்திகேயா என்பவர் நடித்திருந்தார். இவர் கேஜிஎஃப், எம்புரான் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.
ஆனால், அஜித்தின் மகனாக முதலில் நடிக்க தேர்வுசெய்யப்பட்டவர் பிரபல மலையாள நடிகர் நஸ்லன். இதுகுறித்து பேசிய நஸ்லன், “நடிகர் அஜித்துக்கு மகனாக நடிக்க வேண்டும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னைத் தொடர்புகொண்டார். என் திரைவாழ்வில் மிகப்பெரிய வாய்ப்பு அது. ஆனால், அப்போது ஆழப்புழா ஜிம்கானா படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன்.

குட் பேட் அக்லியிலும் எனக்கான காட்சிகள் அதிகம் இருப்பதால் படப்பிடிப்புக்காக நீண்ட நாள்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், குட் பேட் அக்லி படத்தில் நடிக்க முடியவில்லை. இது வருத்தமாகத்தான் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாராட்டுகளைப் பெறும் கோர்ட்!