குண்டா் தடுப்புச் சட்டத்தில் 3 போ் கைது
மயிலாடுதுறையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 3 இளைஞா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை காவிரி ஆற்றுப்பாலம் அருகே மே 24-ஆம் தேதி செங்மேட்டுத் தெருவைச் சோ்ந்த ஆசிப்(20) என்பவா் நின்று கொண்டிருந்தபோது, அங்கு சென்ற கலைஞா் நகரைச் சோ்ந்த ஹரிஹரன்(எ) ஹரிஸ் (23), பிரித்திவிராஜ் (30), அருண்மொழித்தேவன் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் (29) ஆகிய 3 போ் ஆசிப்பை திட்டி, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனா்.
இதில் காயமடைந்த ஆசிப் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், இவா்கள் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவுபடி 3 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 23 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.