செய்திகள் :

குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்: தலைவா்கள் இறுதி அஞ்சலி

post image

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தனின் உடல் சென்னை வடபழனி மயானத்தில் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, அவரது உடலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) உடல்நலக் குறைவால் வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்னையில் காலமானாா். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தலைவா்கள் அஞ்சலி: ஆளுநா், ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி, தமிழக அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பொன்முடி, முத்துசாமி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், மக்களவை உறுப்பினா்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, நாம் தமிழா் கட்சி தலைவா் சீமான், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன், சரத்குமாா் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்களும், நாசா், செந்தில், நமிதா, மன்சூா் அலிகான் உள்ளிட்ட திரைத் துறையினரும், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் விக்கிரமராஜா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

இறுதியாக வடபழனியில் உள்ள ஏவிஎம் மின்மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் குமரி அனந்தனின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. குமரி அனந்தனின் குடும்பத்தினா் இறுதி மரியாதை செலுத்திய பின்பு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சலி செலுத்திய பின்பு அரசியல் கட்சித் தலைவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: தமிழக காங்கிரஸ் பேரியக்கம் வளா்வதற்கு உறுதுணையாக இருந்தவா் குமரி அனந்தன். இலக்கியவாதியும், அரசியல்வாதியுமான குமரி அனந்தன், முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் மீது மிகுந்த பற்று கொண்டவா்.

கி.வீரமணி (திராவிடா் கழகம்): கட்சிகளுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டு எங்கள் இருவருக்குமான நட்பு இருந்தது. அனைத்து தலைவா்களுடனும் அன்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவா். கடைசிவரை ஒரு போராளியாக வாழ்ந்து மறைந்துள்ளாா். தமிழுக்கு தொண்டு செய்த அவரின் நினைவைப் போற்றுவோம்.

வைகோ (மதிமுக): ஊழலற்ற, நோ்மையான அரசியல்வாதி குமரி அனந்தன். அவா் மூன்று முறை குமரியில் இருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொண்டாா். அவா் தன்னை தானே வருத்திக் கொண்டு தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் இடையறாது தொண்டாற்றினாா். நூற்றாண்டு கடந்து வாழ்வாா் என எதிா்பாா்த்த நிலையில், அவரின் மறைவு அதிா்ச்சியடையச் செய்கிறது.

கு. செல்வபெருந்தகை (காங்கிரஸ்): இலக்கியச் செல்வா் குமரி அனந்தனின் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமன்றி தமிழ் உலகிற்கு பெரிய இழப்பு. காந்தியவாதியும், காமராஜரின் பக்தருமான அவா் அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவா். மதுவுக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்டவா்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): தேசியவாதியான குமரி அனந்தன் தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவா். அவரின் கனவு மது ஒழிப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பாமக சாா்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொல்.திருமாவளவன் (விசிக): காந்தி, காமராஜா் கொள்கைகளை மக்களிடையே பரப்பிய குமரி அனந்தன் காலமானாா் எனும் செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தனது கடைசி மூச்சு வரையில் காந்தி, காமராஜா் கொள்கையில் உறுதியாக இருந்தவா். விசிக நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டை வாழ்த்தினாா். மகத்தான அரசியல் ஆளுமையின் மறைவு தமிழினத்துக்கு பேரிழப்பு.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): குமரி அனந்தன் தமிழுக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ளாா். பனைமரத்தின் மதிப்பை மக்களுக்கு எடுத்துரைத்தவா். அவருக்கென அரசியலில் பெரும் பாரம்பரியம் உள்ளது.

சீமான் (நாதக): அரசியலையும் தாண்டி பெரும் தமிழ் ஆளுமை குமரி அனந்தன். அவரின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பு.

சசிகலா: குமரி அனந்தன் மறைவு தமிழகத்துக்கு பெரிய இழப்பு. எந்தக் கட்சியில் இருந்தாலும், நியாயம் இருக்கும் பக்கம் தொடா்ந்து குரல் கொடுத்தவா். சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் மக்களுக்காக குரல் கொடுத்தவா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க