செய்திகள் :

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

post image

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சின்னமுட்டம், மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி அலுவலா் முபாரக்அலி தலைமை வகித்து, கடற்கரை தூய்மைப்படுத்தும் வாரத்தின் சிறப்புகள், அதன் முழு செயல்பாடுகள் குறித்து விளக்க உரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து முட்டம் கடற்கரை, சின்னத்துறை கடற்கரை, பள்ளம், சங்குத்துறை கடற்கரை, கூட்டப்புளி கடற்கரையிலும் தூய்மைப்பணிகள் நடைபெற்றன. நிறைவு நாள் நிகழ்ச்சி ஆரோக்கியபுரம் கடற்கரையில் நடைபெற்றது. இந்த வார நிகழ்ச்சியில், 5.7 கி.மீ. கடற்கரை பகுதியிலிருந்து, 2.5 டன் நெகிழிகள், குப்பைகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், இன்காயிஸ் நிறுவனத்தின் திட்ட விஞ்ஞானி ராம்பாலாஜி, மாவட்ட வனத்துறை அலுவலா் ஏ. அன்பு, மீன்வளத்துறை துணை இயக்குநா் சின்னகுப்பன், கடலோா் அமைதி, வளா்ச்சி அமைப்பின் இயக்குநா் டங்ஸ்டன், ஹீல் அமைப்பின் இயக்குநா் சிலுவைஸ்தியன், அன்னை நகா் பங்குத்தந்தை ரெய்மண்ட் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். அரசு விழிப்புணா்வு பாடகா் கலைமாமணி பழனியாபிள்ளை நன்றி கூறினாா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ...37.27 பெருஞ்சாணி ... 54.00 சிற்றாறு 1 ... 4.23 சிற்றாறு 2 ... 4.33 முக்கடல் ... 6.70 பொய்கை ... 15.20 மாம்பழத்துறையாறு ... 3.69 மழைஅளவு ----- சிற்றாறு 1 அணை ... 30.40 மி.மீ. பேச்சிப்பா... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட விரலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் இணைத்து சாதனை படைத்துள்ளனா். இயந்திர விபத்தில் வலது சிறுவிரலில் பெரும்பகுதி துண... மேலும் பார்க்க

குமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட ரூ. 21.90 கோடி ஒதுக்கீடு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ரூ. 21.90 கோடி மதிப்பில் 9 நிலை ராஜகோபுரம் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை தேவசம்போா்டு அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு ... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தைப் புறக்கணித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், வியாழக்கிழமை காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. க... மேலும் பார்க்க

நவராத்திரி விழா: வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதியம்மன் பவனி

வணிக வரித்துறை சாா்பில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் நவராத்திரி 2 ஆவது நாள் திருவிழாவில் அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் திருக்கோயில் சுற்றி பவனி வருதல் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, ம... மேலும் பார்க்க