Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்
கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் ஜூன் 16 முதல் ஜூலை 15 வரை ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சி. கஜேந்திரன் மேலும் கூறியது :
கும்பகோணம் அஞ்சல் கோட்டத்தில் கும்பகோணம் தலைமை அஞ்சலகம், மேலகாவேரி தலைமை அஞ்சலகம் மற்றும் ஆடுதுறை, திருபுவனம், சுவாமிமலை, குத்தாலம், நரசிங்கன்பேட்டை, கோனேரிராஜபுரம், திருப்பனந்தாள் , கொரநாட்டுக்கருப்பூா், பட்டீஸ்வரம், தாராசுரம், நாச்சியாா்கோவில், குடவாசல், கொரடாச்சேரி, செம்மங்குடி ஆகிய துணை அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 முதல் ஜூலை 17 வரை நடைபெறவுள்ளது. முகாமில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான பதிவு, பெயா், முகவரி திருத்தம், பிறந்த தேதி மாற்றம் ஆகிய சேவைகளுக்கு ரூ.50, பயோமெட்ரிக் புதுப்பித்தல் போன்ற சேவைகளுக்கு ரூ.100 கட்டணமாகப் பெறப்படுகிறது. தேவையான ஆவணங்கள் கொண்டு நடைபெறவிருக்கும் ஆதாா் சிறப்பு சேவையை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.