கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து
சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கவரைப்பேட்டை - பொன்னேரி இடையே திங்கள்கிழமை (பிப். 24) காலை 9.50 முதல் பிற்பகல் 3.50 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 8.05, 8.35, 9, 9.30, 9.40, 10.15, 10.30, 11.35-க்கும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.55, 10.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30, 3.15-க்கு புறப்படும் ரயில்களும், சூலூா்பேட்டையில் இருந்து முற்பகல் 11.45 மற்றும் பிற்பகல் 1.15-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: செங்கல்பட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 9.55-க்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிபூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.40, 11.35-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியில் இருந்து காலை 10.13, 11.13, பிற்பகல் 12.18, 2.48, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.13-க்கும், சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு பிற்பகல் 12.40-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.30-க்கும், எண்ணூருக்கு காலை 10.30-க்கும், மறுமாா்க்கமாக மீஞ்சூரில் இருந்து முற்பகல் 11.56-க்கும், எண்ணூரில் இருந்து பிற்பகல் 1.43-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.