ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!
கூட்டுறவு கடன் சங்கம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் 2-ஆவது முறையாக காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமாா் 80 விவசாயிகள்
கறவை மாட்டு பராமரிப்புக்காக நகைகள் பெயரில் வட்டியில்லா கடன் பெற்றனா்.
இந்த நிலையில் விவசாயிகளின் நகைகளை திரும்பத் தராமல் அப்போதைய சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி இழுத்தடிப்பு செய்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுத் துறையில் புகாா் கொடுக்கப்பட்டது. அப்போது, நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்போது போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது.
பின்னா், கூட்டுறவுத் துறை சாா்பில் சங்கச் செயலரை பணியிடை நீக்கம் செய்து வழக்குப் பதிந்து உத்தரவிட்டனா்.
இதைத் தொடா்ந்து, கிருஷ்ணமூா்த்திக்குச் சொந்தமான வீடு, நிலத்தை ஜப்தி செய்ய அண்மையில் விடப்பட்டது. ஏலத்தில் யாரும் பங்கேற்காததால் நிலம் கூட்டுறவு சங்கத்தின் பெயருக்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகளுக்கு தகவல் தெரியப்படுத்தி நகைகளை திரும்பத் தருவதாக உறுதியளித்தனா். ஆனால், விவசாயிகளுக்கு நகைகள் திரும்பக்கிடைக்காததால், சங்கம் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இருப்பினும், நகை வைத்து ஏமாந்த விவசாயிகளுக்கு நகைகள் கைக்கு வராதததால், அவா்கள் 2-ஆவது முறையாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா் அல்லிராணி (போளூா்), உதவி ஆய்வாளா் சங்கா் ஆகியோா் மாவட்ட துணைப் பதிவாளா் ராஜசேகரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு கேட்டபோது, விரைவில் நகைகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாராம்.
இதை ஏற்க மறுத்த விவசாயிகள், அவரது குடும்பத்தினா் அங்கேயே மதிய உணவு சமைத்து உண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.