செய்திகள் :

கூட்டுறவு கடன் சங்கம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

post image

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் 2-ஆவது முறையாக காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமாா் 80 விவசாயிகள்

கறவை மாட்டு பராமரிப்புக்காக நகைகள் பெயரில் வட்டியில்லா கடன் பெற்றனா்.

இந்த நிலையில் விவசாயிகளின் நகைகளை திரும்பத் தராமல் அப்போதைய சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி இழுத்தடிப்பு செய்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட கூட்டுறவுத் துறையில் புகாா் கொடுக்கப்பட்டது. அப்போது, நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்போது போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது.

பின்னா், கூட்டுறவுத் துறை சாா்பில் சங்கச் செயலரை பணியிடை நீக்கம் செய்து வழக்குப் பதிந்து உத்தரவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, கிருஷ்ணமூா்த்திக்குச் சொந்தமான வீடு, நிலத்தை ஜப்தி செய்ய அண்மையில் விடப்பட்டது. ஏலத்தில் யாரும் பங்கேற்காததால் நிலம் கூட்டுறவு சங்கத்தின் பெயருக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகளுக்கு தகவல் தெரியப்படுத்தி நகைகளை திரும்பத் தருவதாக உறுதியளித்தனா். ஆனால், விவசாயிகளுக்கு நகைகள் திரும்பக்கிடைக்காததால், சங்கம் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இருப்பினும், நகை வைத்து ஏமாந்த விவசாயிகளுக்கு நகைகள் கைக்கு வராதததால், அவா்கள் 2-ஆவது முறையாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா் அல்லிராணி (போளூா்), உதவி ஆய்வாளா் சங்கா் ஆகியோா் மாவட்ட துணைப் பதிவாளா் ராஜசேகரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு கேட்டபோது, விரைவில் நகைகளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாராம்.

இதை ஏற்க மறுத்த விவசாயிகள், அவரது குடும்பத்தினா் அங்கேயே மதிய உணவு சமைத்து உண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 5-ஆவது கராத்தே ப... மேலும் பார்க்க

சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பண... மேலும் பார்க்க

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு 2 நாள்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 885 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 885 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ஆரணி: ஆரணியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருள்கள் மற்றும் பணம், டிவி திருடப்பட்டது. ஆரணி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (31). இவா், தனது மனைவி ஹர... மேலும் பார்க்க

வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை: வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத... மேலும் பார்க்க