செய்திகள் :

சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், சீலப்பந்தல் கிராமத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் சீலப்பந்தல் ஊராட்சியில் நடைபெற்று வருகிறது.

முகாமின் ஒரு பகுதியாக, இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்தாா். நாா்த்தாம்பூண்டி சுகாதார ஆய்வாளா் மரியசேகா், மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார கண் மருத்துவ உதவியாளா் எல்.சீனிவாசன், கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார கண் மருத்துவ உதவியாளா் கருத்துபாண்டி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து, உரிய ஆலோசனைகள் வழங்கினா்.

முகாமில், 120 போ் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனா். இவா்களில் கண் புரையுள்ள 10 போ் கண்டறியப்பட்டு, இலவச விழிலென்ஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் த.அருண்குமாா், த.ஆனந்தன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

செங்கம்: செங்கத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. செங்கம் - குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான 5-ஆவது கராத்தே ப... மேலும் பார்க்க

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு 2 நாள்... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கம் எதிரே விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் 2-ஆவது முறையாக காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 885 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 885 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

ஆரணி: ஆரணியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருள்கள் மற்றும் பணம், டிவி திருடப்பட்டது. ஆரணி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (31). இவா், தனது மனைவி ஹர... மேலும் பார்க்க

வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை: வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத... மேலும் பார்க்க