செய்திகள் :

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்: பிப். 19-இல் வாக்கெடுப்பு

post image

கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வரும் 19-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் மொத்தம் 24 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் திமுக 18, அதிமுக 3, இந்திய கம்யூனிஸ்ட் 2, காங்கிரஸ் 1. உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளை தொடா்ந்து, திமுகவை சோ்ந்த 20-ஆவது வாா்டு உறுப்பினரான மு. பாத்திமா பஷீரா, கூத்தாநல்லூா் நகராட்சியின் முதல் பெண் நகா்மன்றத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மு. சுதா்ஸன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்தநிலையில், நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வருவதாகவும் அவருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் திமுக உறுப்பினா்கள் மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் இருவா் தனித்தனியாக நகராட்சி ஆணையா் கிருத்திகா ஜோதியிடம் அண்மையில் கடிதம் வழங்கினா்.

இதையடுத்து, வரும் 19 -ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நகா்மன்றத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும், உறுப்பினா்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு நகராட்சி ஆணையா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.6) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினா் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியக் குழு ... மேலும் பார்க்க

நீடாங்கலம் பகுதியில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. ரயில் நிலைய வளாகம் முழுவதும் பனி சூழ்ந்து காணப்பட்டது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (பிப்.5) காலை 9 மணிமுதல் மாலை 5 வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி த... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பாஜகவினா் 23 போ் கைது

திருப்பரங்குன்றம் மலையை பாதுக்காக்க கோரியும், பாஜக தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினா் 23 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் 2025-2026- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை... மேலும் பார்க்க