செய்திகள் :

கேரளம்: பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கி கொள்ளை

post image

கேரளத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், சாலக்குடி அருகே வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை நுழைந்த நபர் ஒருவர் கத்தி முனையில் கொள்ளையடித்து, ஏராளமான பணத்துடன் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

சாலக்குடி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளைச் சம்பவம் குறித்து அவசர கால எண்ணில் இருந்து (ஈஆர்எஸ்எஸ்) பிற்பகல் தங்களுக்கு அழைப்பு வந்தது.

பிரேசில்: பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் காயம்

சாலக்குடி அருகே உள்ள பொட்டாவில் உள்ள வங்கிக் கிளைக்கு உடனடியாக ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட சரியான தொகை மற்றும் கொள்ளையனின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.

சந்தேக நபரை அடையாளம் காணவும், குற்றத்தைச் செய்த பின்னர் அவர் எந்த திசையில் தப்பி ஓடினார் என்பது குறித்து விவரங்களை போலீஸ் குழு சேகரிப்பதோடு சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பூடான் பெட்ரோல் விலை: இந்தியாவிலிருந்து சுற்றுலா சென்றவருக்கு அதிர்ச்சி!

இந்தியாவிலேயே சில மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கும் கீழ் இருந்துகொண்டிருந்தாலும், பூடானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலைதான் இன்றைய ஹாட் டாப்பிக்.பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேச... மேலும் பார்க்க

அதென்ன 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?

இந்தியாவில், குடியரசுத் தலைவர் தொடங்கி, நாட்டின் மிக முக்கிய பதவியை வகிப்பவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் பல வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.ஒருவருக்கு எந்தவிதம... மேலும் பார்க்க

அதானி குழும லாரியால் இருவர் பலி! 8 வாகனங்களை எரித்து கலவரம்!

மத்தியப் பிரதேசத்தில் கனரக லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.மத்தியப் பிரதேசத்தில் சிங்ரௌலி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராம்லல்லு யாதவ், ராம் சாகர் பிரஜாபதி இருவர் மீதும் ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கியது!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் தொடங்கின. நாடு முழுவதும... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!

புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மக்களவைத் தலைவர் நியமித்துள்ளார்.மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ... மேலும் பார்க்க

அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமிருதசரஸ்: நாடு கடத்தும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு ... மேலும் பார்க்க