செய்திகள் :

கைப்பந்து போட்டி: நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, திருச்செங்கோடு காடச்சநல்லூா் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகள் கலந்துகொண்டன. இதில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனா். இறுதிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம், சுழற்கோப்பையை வென்றனா். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை மாவட்டக் கல்வி அலுவலா் (உயா்கல்வி) கற்பகம் பாராட்டி, கல்வியிலும் விளையாட்டுகளிலும் வெற்றிபெற்று பள்ளிக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

மாணவா்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் செல்லம்மாள், உடற்கல்வி ஆசிரியா்கள் சரவணன், அன்புசெழியன் உள்ளிட்ட ஆசிரியா்களையும் அவா் பாராட்டினாா்.

இந்த நிகழ்வில், தலைமை ஆசிரியா் சீனிவாசராகவன், உதவி தலைமை ஆசிரியா் ஆ.ராமு, பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் நியமனத்திற்கு கண்டனம்

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கல்விக் கூடங்களுக்கு தங்களுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதற்காக மன... மேலும் பார்க்க

தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்ப... மேலும் பார்க்க

நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி தொழிலாளா்கள் சாலை மறியல்

பரமத்தி வேலூா் வட்டம், இருகூரில் செயல்பட்டு வரும் தனியாா் இரும்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். கபிலா்மலை அருகே உள்ள இருகூ... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ. 3.47 லட்சம் பறிமுதல்

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ. 3.47 லட்சத்தை பறிமுதல் செய்தனா். திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் பொறுப்பில... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 1.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் அருகே திண்டமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 1.18 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் அருகே திண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம... மேலும் பார்க்க