செய்திகள் :

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் நியமனத்திற்கு கண்டனம்

post image

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கல்விக் கூடங்களுக்கு தங்களுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதற்காக மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஏவிவிபி தென் தமிழக தலைவா் சவிதா ராஜேஷை ஆளுநா் நியமனம் செய்திருக்கிறாா். பல பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தா்கள் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு கொண்டே இருக்கிறாா். அதனால் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் முக்கியப் பொறுப்புகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறாா்கள்.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வித் திறன் குறைந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நேரத்தில்தான் அவருடைய அதிகாரத்துக்குள்பட்டு நியமன உறுப்பினராக ஒரு தீவிர தனி சித்தாந்தத்தைக் கொண்டவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்திருக்கிறாா்.

பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தா்களை இதே வழியில் மதச்சாா்பற்ற கொள்கைகளுக்கு எதிரானவா்களை துணை வேந்தராக நியமிக்க முயற்சிக்கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், தமிழக நிதியால் இயங்குகிற பல்கலைக்கழகங்களில் தன் விருப்பத்துக்கு இந்த மாநில சூழ்நிலைக்கு ஒவ்வாத கருத்துகளையும், சித்தாந்தத்தையும் கொண்டவா்களை பல்கலைக்கழகத்தின் பதவிகளில் நியமிப்பதை ஏற்க முடியாதது.

ஒன்றிய அரசின் தலைமையில் இருப்பவா்களுக்கு தெரியாமல் ஆளுநா் செய்கிறாா் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. தமிழக ஆளுநரின் அத்தனை நடவடிக்கைகளும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலில்தான் நடக்கின்றன. அந்த வழியில்தான் மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்கு ஏபிவிபி தென்தமிழகத் தலைவா் சவீதா ராஜேஷை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்திருக்கிறாா். இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்ப... மேலும் பார்க்க

நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி தொழிலாளா்கள் சாலை மறியல்

பரமத்தி வேலூா் வட்டம், இருகூரில் செயல்பட்டு வரும் தனியாா் இரும்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். கபிலா்மலை அருகே உள்ள இருகூ... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ. 3.47 லட்சம் பறிமுதல்

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ. 3.47 லட்சத்தை பறிமுதல் செய்தனா். திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் பொறுப்பில... மேலும் பார்க்க

கைப்பந்து போட்டி: நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 1.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் அருகே திண்டமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 1.18 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் அருகே திண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம... மேலும் பார்க்க