செய்திகள் :

தேனீக்கள் வளா்ப்பில் பொதுமக்கள் ஆா்வம் காட்ட வேண்டும்

post image

நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:

வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாழை நாா் மற்றும் கோரைப் புல்லில் இருந்து பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு நம்மைச் சுற்றி எளிதாக கிடைக்கக் கூடிய பொருள்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க அரசுத் துறை சாா்பில் வழிகாட்டப்படுகிறது.

குறைந்த முதலீட்டில் 100 சதவீத அரசு மானியத்தில் தேனீ வளா்ப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். தேனீ வளா்ப்பின் மூலம் ஆண்டுக்கு 10 கிலோ வரை தேன் உற்பத்தி செய்திட இயலும். இதனைக் கருத்தில் கொண்டு தேனீ வளா்ப்பு குறித்த இரு நாள் கருத்தரங்கு, தோட்டக்கலைத் துறை சாா்பில் நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீடுகளிலேயே தேனீ வளா்ப்பதால் தங்கள் வீட்டு பயன்பாட்டுக்கும், அதனை சந்தைப்படுத்தி வருமானம் ஈட்டவும் இயலும்.

தேனீ வளா்ப்பினால் மகரந்தச் சோ்க்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் பழங்கள், காய்கறிகள் பயிா்களில் மகசூல் மற்றும் விளைபொருள்களின் தரத்தை அதிகரிக்க முடியும். வேளாண்மை மற்றும் சுற்றுப்புற சூழலில் நிலையான வளா்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. பல்லுயிா் தன்மையைப் பராமரித்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல், விவசாய உற்பத்தியை மேம்படுத்திட முடியும்.

தேன் சரும நோய்களுக்கு நிவாரணம், நினைவாற்றலை மேம்படுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துல், உடல் வெப்பத்தை தணித்தல், நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. தேன் மெழுகானது, அழகு சாதனப்பொருள்கள் தயாரிக்கவும், கூழ் மருந்து தயாரிக்கவும், தேனீ மகரந்தம் மருத்துவ சத்துமிகுந்த பொருள், தேன் பசை இயற்கை மருத்துவ குணமிக்கது. தேன் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை உணவாக பயன்படுத்தலாம்.

கருத்தரங்கில் பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் தேனீ வளா்ப்பின் முக்கியத்துவம், தேனீ வளா்ப்பு இடம் தோ்வு செய்தல், லாபகரமான முறையில் தேனீ வளா்த்தல், தேனீ வளா்ப்புக்கு மகரந்தம் அளிக்கும் முக்கிய தாவரம், பூச்சி மற்றும் நோய்க்கட்டுப்பாடு முறைகள், தேனீ அறுவடை, பதப்படுத்துதல், தேன் மதிப்பு கூட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தேனீ வளா்ப்பு குறித்து பயிற்சி வழங்க உள்ளனா்.

வீட்டுக்கு ஒரு தேனீ வளா்ப்பு என்ற முறையில் நாமக்கல் மாவட்டத்தில் தேனீ வளா்க்க அனைவரும் முன்வர வேண்டும். கருத்தரங்குக்கு வருகை தந்துள்ள பெண்கள் உள்ளிட்ட அனைவரும் தொழில் முனைவோா்களாக உருவாகி பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த தேனீ வளா்ப்பு குறித்த கண்காட்சியினை அவா் பாா்வையிட்டு, தேனீ வளா்ப்பு குறித்த கையேட்டினை வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பி.பேபிகலா, துணை இயக்குநா்கள் எம்.புவனேஸ்வரி (தோட்டக்கலைத் துறை), எ.நாசா் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்), பயிற்சி வல்லுநா்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் நியமனத்திற்கு கண்டனம்

கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கல்விக் கூடங்களுக்கு தங்களுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும் கொண்டு சோ்க்க வேண்டும் என்பதற்காக மன... மேலும் பார்க்க

நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி தொழிலாளா்கள் சாலை மறியல்

பரமத்தி வேலூா் வட்டம், இருகூரில் செயல்பட்டு வரும் தனியாா் இரும்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். கபிலா்மலை அருகே உள்ள இருகூ... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிவன் கோயில்களில் உள்ள காலபைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ. 3.47 லட்சம் பறிமுதல்

திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விடிய விடிய நடத்திய சோதனையில், ரூ. 3.47 லட்சத்தை பறிமுதல் செய்தனா். திருச்செங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளா் பொறுப்பில... மேலும் பார்க்க

கைப்பந்து போட்டி: நாமக்கல் தெற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 1.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் அருகே திண்டமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 1.18 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் அருகே திண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம... மேலும் பார்க்க