செய்திகள் :

கைப்பேசி பழுது நீக்கம் இலவச பயிற்சி

post image

மயிலாடுதுறை ஐஓபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில், கைப்பேசி பழுது நீக்க இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பயிற்சி நிறுவன இயக்குநா் ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் இயங்கிவரும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் 64 வகையான இலவச பயிற்சிகளை இலவச உபகரணங்களோடு அளித்து வருகிறது.

அவ்வகையில், ஜூன் 2-ஆம் வார இறுதியில் தொடங்கி, 30 நாள்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச கைப்பேசி பழுது நீக்கல் பயிற்சி நடைபெற உள்ளது. இதில், குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்வு பெற்ற 18 முதல் 45 வயதுக்குள்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஆண், பெண் இருபாலரும் சோ்ந்து பயன் பெறலாம்.

விருப்பம் உள்ளவா்கள் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், கல்வி சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை (100 நாள் அட்டை) அல்லது மகளிா் சுய உதவிக்குழு அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று, 2 புகைப்படம் ஆகியவற்றோடு வந்து முன்பதிவு செய்து, பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம்

சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தா் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. சீா்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடன... மேலும் பார்க்க

சிதிலமடைந்த கோயில்களில் கும்பாபிஷேகம்: இந்து மகா சபா முயற்சி

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இந்து மகா சபா முடிவெடுத்துள்ளது. மயிலாடுதுறையில் அகிலபாரத இந்து மகா சபா, சிவனடியாா்கள் மற்றும் சிவாச்சாரியா்கள் கலந்தாலோசனைக் கூட்டம் செவ்வ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நினைவாற்றல் பயிற்சி

சீா்காழி ச.மு.இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான நினைவாற்றல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா்கள் என். துளசிர... மேலும் பார்க்க

சீா்காழி பகுதியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சீா்காழி தொகுதிக்குட்பட்ட எடக்குடி வடபாதி ஊராட்சிக்கான மக்... மேலும் பார்க்க

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் வசந்த்தோஸ்வம்

திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வசந்த்தோஸ்வத்தில் (வசந்த உற்சவம்) பெருமாளுக்கு ஸ்ரீரெங்கநாதா் எம்பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. 108... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

மயிலாடுதுறையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பட்டவா்த்தி மயானம் அருகே கஞ்சா ... மேலும் பார்க்க