செய்திகள் :

கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

post image

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி குரு கோயில் கடந்த நான்கு மாதங்களாக மகா கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் தொடங்கியது.

தொடர்ந்து தொய்வின்றி திருப்பணிகள் நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில் , மூலவர், கைலாசநாதர் , அகிலாண்டேஸ்வரி மற்றும் நாகினி என 13 யாக குண்டங்கள், 26 சிவாச்சாரியார்கள் , 9 ஓதுவார் மூர்த்திகள் என சிறப்புடன் பத்தாம் தேதி காலை 9 மணியளவில் மங்கள இசையுடன் கணபதி பூஜை செய்து சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவினை துவங்கினர்.

கடந்த மூன்று நாள்களாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை 9 மணி அளவில் பூர்ணாகுதி நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்ற மூலவர் தட்சிணாமூர்த்தி கைலாசநாதர் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகிய விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரங்கள் என அனைத்திற்கும் சிவாச்சியாளர்கள் வேதம் முழங்க சிவ வாத்தியங்கள் வான வேடிக்கையுடன் புனித நீர் விமானங்களுக்கு ஊற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கும் சிறப்பு கும்பாபிஷேக நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமரதுரை , துணை ஆணையர் ஜெயா, உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர்கள் கதிரவன், செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் , முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கில் திரண்டு மகா கும்பாபிஷேக விழாவினை கண்டு ரசித்து இறையருள் பெற்றனர்.

The consecration ceremony of the Kailasanathar and Dakshinamurthy temples along with Akilandeswari was held.

விஷால் - 35 படப்பிடிப்பு துவக்கம்!

நடிகர் விஷால் நடிக்கவுள்ள அவரின் 35-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் விஷால் மத கஜ ராஜா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ... மேலும் பார்க்க

காத்து வாக்குல ரெண்டு காதல்! தமிழில் புதிய ரொமான்டிக் சீரியல்!

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற புதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தைப் போலவே ஒரு ஆண், இரு பெண்களுடன் கொள்ளும் காதல் கதையை மையமாக... மேலும் பார்க்க

சரத் குமார் பிறந்த நாள்: டூட் போஸ்டர் வெளியீடு!

நடிகர் சரத் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு டூட் படத்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிவரும் டூட் படத்தில் நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக மமிதா... மேலும் பார்க்க

பாகுபலி, ஜவான் சாதனையை முறியடித்த ஒடியா படம்!

பு பட்டு பூட்டா திரைப்படம் ஒடியாவில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது. இந்திய சினிமாவின் வரலாறு நூறாண்டைக் கடந்தாலும் சில மாநிலங்களில் சினிமாவின் வளர்ச்சி உருவாக்க ரீதியாகவும் வ... மேலும் பார்க்க

செல்ஸி வீரரைக் கீழே தள்ளிய பிஎஸ்ஜி பயிற்சியாளர்..! கடும் விமர்சனங்கள்!

கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த மோதல்கள் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. அதிலும் பிஎஸ்ஜி பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் கடுமையான விமசர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

சரோஜா தேவி ஏன் ஒரு நடிகரைத் திருமணம் செய்யவில்லை?

நடிகை சரோஜா தேவி காதல் மற்றும் திருமணம் குறித்து பேசியவை...நடிகை சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று பெங்களூருவில் காலமாகிவிட்டார். நடித்துவந்த காலத்தில் எத்தனை லட்சம் கண்களைத் தன் கண்களால் ஈர்த்திருப்... மேலும் பார்க்க