செய்திகள் :

ஆக்ரோஷமான கொண்டாட்டம், மோதல்..! முகமது சிராஜிக்கு அபராதம்!

post image

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு விதிமீறலுக்காக ஐசிசி 15 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாளில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் விக்கெட்டை 5.5ஆவது ஓவரில் எடுத்தார்.

இந்த விக்கெட் எடுத்த உற்சாகத்தில் பென் டக்கெட் முகத்துக்கு நேராகச் சென்று சிராஜ் கத்தினார்.

பின்னர், பென் டக்கெட்டின் தோள் பட்டையை மோதினார். உடன் வந்த வாஷிங்டன் சுந்தர் சிராஜை அமைதியாகக் கூட்டிக்கொண்டு வந்தார்.

இந்திய ரசிகர்கள் “டிஎஸ்பி சிராஜ்” எனக் கொண்டாடி வந்தார்கள். பலரும் விராட் கோலியின் வளர்ப்பு என பெருமிதமாகக் கூறினார்கள்.

மிகுந்த விமர்சனத்துக்குள்ளான இந்தச் செயலுக்கு ஐசிசி சிராஜின் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதத்தை அபராதமாக வித்தித்துள்ளது.

முகது சிராஜ் இந்த அபராதத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், இந்த அபராதத்துடன் தகுதி இழப்புப் புள்ளி ஒன்றையும் முகமது சிராஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடைசி நாளான இன்று இந்தியா 81 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

The ICC has fined Indian fast bowler Mohammad Siraj 15 percent for a breach of the rules.

விறுவிறுப்பான கட்டத்தில் 3-ஆவது டெஸ்ட்: இந்தியாவுக்கு 60 ரன்கள் தேவை!

லண்டன்: லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று(ஜூலை 14) இந்திய அணியின் வெற்றி... மேலும் பார்க்க

வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து... 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் மதிய உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முத... மேலும் பார்க்க

ஆஸி. - மே.இ.தீ. டெஸ்ட் தொடர்: 9 நாள்களில் 106 விக்கெட்டுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 9 நாள்களில் 106 விக்கெட்டுகள் விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 போட... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 135 ரன்கள், இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகள் தேவை: கடைசி நாளில் யார் வெல்லுவார்கள்?

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட்டின் கடைசி நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் இழப்பு, ஆஸி. 181 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2-ஆம் நாள் முடிவில் ஆஸி. 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஜமைக்காவில் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங... மேலும் பார்க்க

எம்எல்சி கோப்பையை வென்ற எம்ஐ நியூ யார்க்..! 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பையை எம்ஐ நியூ யார்க் அணி வென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் கடந்த ஜூன் 12 முதல் தொடங்கி நேற்று இரவுடன் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் எம்ஐ ... மேலும் பார்க்க