செய்திகள் :

வேலூர்: பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி கட்டடப் பணிகள்; சிறிய அறையில் குழந்தைகள்- பெற்றோர் அச்சம்!

post image

வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் அருகில் அமைந்துள்ள ஊசூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

உடனடியாக அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.16.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் இந்த அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரருக்கு வர வேண்டிய நிதி வராமல் உள்ளதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்கும் பணிகள் முடியும் வரை ஊசூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இருக்கும் பொருட்கள் வைக்கும் சிறிய குடோனில் வைத்து தற்காலிகமாக அங்கன்வாடி மையம் நடத்தப்பட்டு வருகிறது.

போதிய இட வசதி இன்றியும், சரியான காற்றோட்ட வசதியும் இல்லாத நிலையில் சிறிய குடோனில் அங்கன்வாடி மையம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள், “புதிய கட்டடம் கட்டும் வரை இந்த சிறிய குடோன் அங்கன்வாடி மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக அங்கன்வாடி மையங்களில் சமையலறை தனியாக இருக்கும். ஆனால் இந்த சிறிய குடோனில் குழந்தைகள் இருக்கும் இடமும், சமையல் செய்யும் இடமும் அருகில் உள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட வேண்டும். விரைவில் பணிகள் முடித்து குழந்தைகளை புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்” என்றனர்.

எப்போது பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெறும் என்று ஊசூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபொழுது, “கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரருக்கு வரவேண்டிய நிதி வராமல் நிலுவையில் உள்ள காரணத்தினால் தான் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் MGNREGS திட்ட நிதி வந்த உடன் பணிகள் தொடங்கப்படும்.

அதற்காக வட்டார வளர்ச்சி அலுவகத்தில் இது குறித்து விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது. ஒரு சில வாரத்தில் பணிகள் தொடங்கி நடைபெறும்” என்று கூறினார். சமையல் செய்யும் இடத்திற்கு அருகிலும் சரியான காற்றோட்ட வசதி இல்லாமலும் சிறிய குடோனில் அங்கன்வாடி மையம் நடத்தப்படுவதினாலும் சிறு குழந்தைகளை ஒரு வித அச்சத்துடனே பெற்றோர்கள் விட்டு செல்வதை பார்க்க முடிகிறது.

இதனை கருத்தில் கொண்டு விரைந்து கட்டட பணிகள் எல்லாம் முடித்து, குழந்தைகளை புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காஷ்மீர்: "கவர்னரின் தோல்வியால் போரின் விளிம்புவரை..." - முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஆதங்கம்!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக... மேலும் பார்க்க

"இந்தி நமக்கு மூத்த தாய்; அப்துல் கலாம் பார்வையில்..." - தேசிய மொழியாக வரவேற்கும் பவன் கல்யாண்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் எந்தக் கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும் இந்தித் திணிப்புக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.ஆனால், தெலுங்கு தேசம் கட்ச... மேலும் பார்க்க

பீகார்: 11 நாள்களில் 31 கொலைகள்; "இந்தியாவின் குற்றத் தலைநகர்..." - NDA அரசை விமர்சித்த ராகுல்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் 11 நாள்களில் 31 கொலைகள் நிகழ்ந்துள்ளதைக் கண்டித்துப் பேசுகையில் பீகார் நாட்டின் 'இந்தியாவின் குற்றத் தலைநகரம்' என விமர்சித்துள்ளார். ப... மேலும் பார்க்க

'உங்களின் நீலிகண்ணீர் அனுதாபத்தை தேடிக்கொள்ள பயன்படும்!'- மல்லை சத்யாவுக்கு மதிமுக ஆசைத்தம்பி பதில்

மதிமுக-வில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. வைகோவிற்கும், மல்லை சத்யாவிற்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிமுக-வின் கழக இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மல்லை சத்யா குறித்... மேலும் பார்க்க

'படத்துல லாக்கப் டெத்த நியாப்படுத்தி நடிச்சுட்டு இப்போ என்ன?' - விஜய்யை அட்டாக் செய்யும் கனிமொழி!

சிவகங்கையில் காவல்துறையினரின் சித்ரவதையால் உயிரிழந்த அஜித் குமாரின் இறப்புக்கு நீதி வேண்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய்யின் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. இந்நிலையில், இதற்க... மேலும் பார்க்க