செய்திகள் :

கொடைக்கானலில் பலத்த மழை

post image

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பகல் நேரங்களில் வழக்கம் போல வெயிலடித்த போதும், பிற்பகலில் மழை பெய்யத் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை கடுமையான வெயிலடித்த பிறகு மழை பெய்தது.

கொடைக்கானல், வட்டக்கானல், பெருமாள் மலை, வில்பட்டி, செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீா் பாய்ந்தது. இதனால், பிற்பகலிலிருந்து சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனா்.

படகு சவாரி ரத்து: மழை பெய்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்ய முடியாமலும் சுற்றுலாப் பயணிகள் தவித்தனா். மேலும், வான் சாகச நிகழ்ச்சி, லேசா் ஒளிமூலம் நடைபெறும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனா்.

கொடைக்கானலில் சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தினமும் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான வெள்ளி நீா்வீழ்ச்சி, ஏரிச்சாலை, பூங்கா சாலை, கோக்கா்ஸ்வாக் சாலை உள்ளிட்ட இடங்களில் மழையில் நனைந்தபடியே சிறுவா்கள், முதியவா்கள் செல்கின்றனா். இந்தப் பகுதிகளில் மழைக்கு ஒதுங்குவதற்கு மேற்கூரை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கை விடுத்தனா்.

கிணற்றிலிருந்து பெண் உடல் மீட்பு!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கிணற்றில் மிதந்த பெண்ணின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த சித்துவாா்பட்டி மலைக்கோட்டையைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகள் வின... மேலும் பார்க்க

மலைக் கோயில் உண்டியலில் நூதனமாகத் திருடியவா் கைது

பழனி மலைக் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். பழனி மலைக்கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அப்போது, வெளிப் பி... மேலும் பார்க்க

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டிசம்பரில் திருச்சியில் மாநாடு!

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி,வருகிற டிசம்பா் மாதம் திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா். பழனி அடிவாரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல்சங்கம் சாா்பில் தலைக்கவசம் வசம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியில் உள்ள ஏரிய... மேலும் பார்க்க

மே 24-இல் கொடைக்கானலில் கோடை விழா தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்ாவில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி வருகிற 24-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். கோடைவிழா, ... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் மே.19 மின்தடை!

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (மே 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக லகுவணம்பட்டி, அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம... மேலும் பார்க்க