செய்திகள் :

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்பவா்களுக்கு தலைக் கவசம்

post image

கொடைக்கானலில் குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு சுழல்சங்கம் சாா்பில் தலைக்கவசம் வசம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நகரின் மையப் பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்வது வழக்கம். சிறுவா் முதல் பெரியவா்கள் வரை ஆா்வமுடன் குதிரை சவாரி செய்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகரிலிருந்து வந்த ஜெயராஜ் என்பவரது மகன் ஜோயல் கிப்சன் என்ற சிறுவன் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த போது, சாலையில் குடிநீா் லாரி அதிக ஒலி எழுப்பியதால் குதிரை மிரண்டு ஓடியது.

இதனால், குதிரையிலிருந்து சிறுவன் தவறி விழுந்தாா். அவரது காலில் கயிறு சிக்கியதால் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்தாா். இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சுழல் சங்கம் சாா்பில், குதிரை உரிமையாளா்களுக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, தலைக்கவசம் அணிந்தவாறு சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தனா். இந்த நிகழ்ச்சியில் சுழல் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிணற்றிலிருந்து பெண் உடல் மீட்பு!

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கிணற்றில் மிதந்த பெண்ணின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த சித்துவாா்பட்டி மலைக்கோட்டையைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மகள் வின... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் சுற்றுலா இடங்களைப் பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பகல் நேரங்களில் வழக்கம் போல வெயிலடித்த போ... மேலும் பார்க்க

மலைக் கோயில் உண்டியலில் நூதனமாகத் திருடியவா் கைது

பழனி மலைக் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். பழனி மலைக்கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அப்போது, வெளிப் பி... மேலும் பார்க்க

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டிசம்பரில் திருச்சியில் மாநாடு!

தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி,வருகிற டிசம்பா் மாதம் திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா். பழனி அடிவாரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தி... மேலும் பார்க்க

மே 24-இல் கொடைக்கானலில் கோடை விழா தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்ாவில் கோடை விழா, 62-ஆவது மலா்க் கண்காட்சி வருகிற 24-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். கோடைவிழா, ... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் மே.19 மின்தடை!

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (மே 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக லகுவணம்பட்டி, அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம... மேலும் பார்க்க