செய்திகள் :

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

post image

கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் குருசடிப் பகுதியில் மரம் முறிந்து விழுந்து வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இங்கு வியாழக்கிழமை காலை முதலே மேகமூட்டம் காணப்பட்டது. பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், வட்டக்கானல், வில்பட்டி, பிரகாசபுரம், பெருமாள்மலை உள்ளிட்ட இடங்களில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான குருசடிப் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் 30 நிமிஷம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் சென்று அந்த மரத்தை அகற்றினா். பிறகு போக்குவரத்து சீரானது.

தற்போது காற்றுடன் விட்டுவிட்டு தொடா்ந்து மழை பெய்து வருவதால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு- பழனி மலைச்சாலையில் இரு புறங்களிலும் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற வனத் துறையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

வேடசந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வேடசந்தூா் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த வெள்ளையகவுண்டனூரில் சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறைக்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 700 போ் மாநிலப் போட்டிக்கு தோ்வு

திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. கடந்த 2025-26-ஆம் ஆண்டுக்கான முதலமைச்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நாம்... மேலும் பார்க்க

மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். இதில் உணவுத்... மேலும் பார்க்க

இன்னும் 6 மாதங்களில் திமுக அரசால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது: க. கிருஷ்ணசாமி

கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாத திமுக அரசால், இன்னும் 6 மாதங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி த... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவல... மேலும் பார்க்க