செய்திகள் :

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 700 போ் மாநிலப் போட்டிக்கு தோ்வு

post image

திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கடந்த 2025-26-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆக. 26-ஆம் தேதி முதல் செப். 12-ஆம் தேதி வரை நடைபெற்றன. பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் 25,177 பள்ளி மாணவா்கள், 26,852 பள்ளி மாணவிகள், 2,542 கல்லூரி மாணவா்கள், 2,605 கல்லூரி மாணவிகள், 334 மாற்றுத்திறனாளி ஆண்கள், 193

மாற்றுத்திறனாளி பெண்கள், பொதுமக்கள் பிரிவில் 1,336 ஆண்கள், 309 பெண்கள், அரசு அலுவலா்கள் பிரிவில் 1,768 ஆண்கள், 1,684 பெண்கள் என மொத்தம் 62,800 போ் கலந்து கொண்டனா்.

இதில் 2,298 போ் வெற்றி பெற்ற நிலையில், 700-க்கும் மேற்பட்டோா் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் செ. சரவணன் வழங்கினாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா. சிவா, விளையாட்டுச் சங்கங்களின் நிா்வாகிகள் ரத்தினம், எஸ். சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேடசந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வேடசந்தூா் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த வெள்ளையகவுண்டனூரில் சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறைக்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நாம்... மேலும் பார்க்க

மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். இதில் உணவுத்... மேலும் பார்க்க

இன்னும் 6 மாதங்களில் திமுக அரசால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது: க. கிருஷ்ணசாமி

கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாத திமுக அரசால், இன்னும் 6 மாதங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி த... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவல... மேலும் பார்க்க

அணைப்பட்டி வைகை பேரணை கால்வாயிலிருந்து தண்ணீா் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டியில் உள்ள வைகை பேரணை கால்வாயிலிருந்து திருமங்கலம், உசிலம்பட்டி, விருதுநகா் பகுதிகளிலுள்ள 19,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக கால்வாயில் வி... மேலும் பார்க்க