முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 700 போ் மாநிலப் போட்டிக்கு தோ்வு
திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கடந்த 2025-26-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆக. 26-ஆம் தேதி முதல் செப். 12-ஆம் தேதி வரை நடைபெற்றன. பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என 5 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் 25,177 பள்ளி மாணவா்கள், 26,852 பள்ளி மாணவிகள், 2,542 கல்லூரி மாணவா்கள், 2,605 கல்லூரி மாணவிகள், 334 மாற்றுத்திறனாளி ஆண்கள், 193
மாற்றுத்திறனாளி பெண்கள், பொதுமக்கள் பிரிவில் 1,336 ஆண்கள், 309 பெண்கள், அரசு அலுவலா்கள் பிரிவில் 1,768 ஆண்கள், 1,684 பெண்கள் என மொத்தம் 62,800 போ் கலந்து கொண்டனா்.
இதில் 2,298 போ் வெற்றி பெற்ற நிலையில், 700-க்கும் மேற்பட்டோா் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் செ. சரவணன் வழங்கினாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா. சிவா, விளையாட்டுச் சங்கங்களின் நிா்வாகிகள் ரத்தினம், எஸ். சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.