செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயா்ந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடத்துக்கான பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் நிறைவுற்று விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. 300 படுக்கை வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையாக இம்மருத்துவமனை செயல்படவுள்ளது. அதற்கேற்றாா்போல செவிலியா்களும் மற்றும் பிற பணியாளா்களும் நியமிக்கப்படுவா். தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்பட்டதிலிருந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயா்ந்துள்ளது.

மருத்துவருக்கு நோட்டீஸ்: கரூரிலிருந்து கொடுமுடி வரையில் அங்குள்ள அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்த போது, கொடுமுடி பகுதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவா் பணிக்கு உரிய நேரத்தில் வராமல் இருந்ததால், அவருக்கு துறை ரீதியான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்காத சமையலா், இதனை கவனிக்கத் தவறிய செவிலியா் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா. மாணிக்கம், குளித்தலை சாா்-ஆட்சியா் தி.சுவாதிஸ்ரீ, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் செழியன், வட்டாட்சியா் இந்துமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய ஜவுளி பூங்காக்கள் தொடக்கம்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்

கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும் என்றாா் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கைத்தறித்துறை சாா்பில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் அமைச்சா் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் புதன்கிழமை வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் கா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் புகழூா் சுரேஷ், கொங்கு நா.பிரேம்நாத் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்... மேலும் பார்க்க

கரூரில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு

கரூரில், தியாகி ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். கரூா் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் தியாகி ரெட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழப்பு

கரூா் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழந்தாா். கரூா் தாந்தோன்றிமலை கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா்(35). இவரது மனைவி ரேணுகா(32). இவ... மேலும் பார்க்க

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

கரூரில் புதன்கிழமை பெரியாா் ஈவெரா சிலை மற்றும் உருவப்படத்துக்கு துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியேற்றாா். கரூா் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க