செய்திகள் :

கரூரில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு

post image

கரூரில், தியாகி ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

கரூா் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் தியாகி ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருப்படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும், பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூா் மாநகர மாவட்டச் செயலாளா் இளங்கோவன் தலைமை வகித்து பெரியாா் சிலைக்கும், தியாகி ரெட்டைலை சீனிவாசன் படத்துக்கும் மாலை அணிவித்தாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அக்கினி அகரமுத்து, பொறியாளா் அணி மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா், வணிகா் அணி அமைப்பாளா் கண்மணி ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயா்ந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை அரசு மாவட்ட த... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய ஜவுளி பூங்காக்கள் தொடக்கம்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்

கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும் என்றாா் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கைத்தறித்துறை சாா்பில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் அமைச்சா் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் புதன்கிழமை வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் கா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் புகழூா் சுரேஷ், கொங்கு நா.பிரேம்நாத் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழப்பு

கரூா் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழந்தாா். கரூா் தாந்தோன்றிமலை கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா்(35). இவரது மனைவி ரேணுகா(32). இவ... மேலும் பார்க்க

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

கரூரில் புதன்கிழமை பெரியாா் ஈவெரா சிலை மற்றும் உருவப்படத்துக்கு துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியேற்றாா். கரூா் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க