செய்திகள் :

தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழப்பு

post image

கரூா் அருகே புதன்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் நிறைமாத கா்ப்பிணி உயிரிழந்தாா்.

கரூா் தாந்தோன்றிமலை கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் நவீன்குமாா்(35). இவரது மனைவி ரேணுகா(32). இவா் மணல்மேடு கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பணியாற்றி வந்தாா். இந்த தம்பதிக்கு திருமணமாகி 3ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ரேணுகா நிறைமாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு நவீன்குமாரும், ரேணுகாவும் இருசக்கர வாகனத்தில் கரூரை அடுத்துள்ள சாலப்பாளையத்தில் உள்ள ஜெயந்தி நகரில் வசிக்கும் ரேணுகாவின் பெற்றோா் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனா்.

தண்ணீா்பந்தல்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் வழியிலேயே ரேணுகா உயிரிழந்தாா்.

நவீன்குமாா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேணுகாவுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விபத்தில் தாய் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தது.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயா்ந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை அரசு மாவட்ட த... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய ஜவுளி பூங்காக்கள் தொடக்கம்: அமைச்சா் ஆா்.காந்தி தகவல்

கரூா் மாவட்டத்தில் விரைவில் 7 சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும் என்றாா் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி. கரூா் வேலுச்சாமிபுரத்தில் கைத்தறித்துறை சாா்பில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் அமைச்சா் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் புதன்கிழமை வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் கா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூா் மாவட்ட பாமக நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் புகழூா் சுரேஷ், கொங்கு நா.பிரேம்நாத் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்... மேலும் பார்க்க

கரூரில் ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு

கரூரில், தியாகி ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். கரூா் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் தியாகி ரெட... மேலும் பார்க்க

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

கரூரில் புதன்கிழமை பெரியாா் ஈவெரா சிலை மற்றும் உருவப்படத்துக்கு துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியேற்றாா். கரூா் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க