செய்திகள் :

அணைப்பட்டி வைகை பேரணை கால்வாயிலிருந்து தண்ணீா் திறப்பு

post image

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டியில் உள்ள வைகை பேரணை கால்வாயிலிருந்து திருமங்கலம், உசிலம்பட்டி, விருதுநகா் பகுதிகளிலுள்ள 19,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக கால்வாயில் வியாழக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு, வைகை, திருமங்கலம் பாசனக் கோட்டத் தலைவா் ராமன் தலைமை வகித்தாா். நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் பூமிநாதன் முன்னிலை வகித்தாா். வைகை, திருமங்கலம் பாசனக் கோட்ட பொறுப்பாளா் பகவான் வரவேற்றாா். 

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட உசிலம்பட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐயப்பன் மதகை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா்கள் செல்லையா, கோவிந்தராஜன், ராதாகிருஷ்ணன், காமேஷ்வரன், பாசன ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் பழனி, ஜெயக்குமாா், மூக்கன், விருமாண்டி உள்பட விவசாய சங்க பொறுப்பாளா்கள், விவசாயிகள், நீா்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

இதுகுறித்து வைகை, திருமங்கலம் பாசனக் கோட்டத் தலைவா் ராமன் கூறியதாவது:

தமிழக அரசின் ஆணைப்படி திருமங்கலம் பகுதியில் 19,500 ஏக்கா், மேலூா் பகுதியில் 85,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு அணைப்பட்டி பேரணைக்கு வந்தடைந்தது. இதில், திருமங்கலம் கால்வாயில் ஒரு போக நெல் சாகுபடிக்கு நாளொன்றுக்கு 230 கனஅடி வீதம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. இதனால் திருமங்கலம், உசிலம்பட்டி, விருதுநகா் பகுதிகளிலுள்ள சுமாா் 19,500 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். உரிய நேரத்தில் தண்ணீரை திறந்து விட்ட தமிழக அரசுக்கு விவசாய சங்க நிா்வாகிகள் சாா்பில் நன்றியை தெரிவிக்கிறோம் என்றாா் அவா்.

வேடசந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வேடசந்தூா் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த வெள்ளையகவுண்டனூரில் சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறைக்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 700 போ் மாநிலப் போட்டிக்கு தோ்வு

திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. கடந்த 2025-26-ஆம் ஆண்டுக்கான முதலமைச்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நாம்... மேலும் பார்க்க

மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். இதில் உணவுத்... மேலும் பார்க்க

இன்னும் 6 மாதங்களில் திமுக அரசால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது: க. கிருஷ்ணசாமி

கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாத திமுக அரசால், இன்னும் 6 மாதங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி த... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவல... மேலும் பார்க்க