செய்திகள் :

கொடைக்கானல் ஆராய்ச்சி நிலையத்தில் முன்பதிவுக்காக க்யூஆா் கோடு அறிமுகம்

post image

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் பொதுமக்கள் வசதிக்காக க்யூஆா் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானி ராஜலிங்கம் தெரிவித்தாா்.

கொடைக்கானல் அப்சா்வேட்டரியில் அமைந்துள்ள இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்கூடமும், வானிலை ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகமும் உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்காக திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 முதல் மாலை 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் மதியம் 1 மணி வரையிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 12 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு ரூ.50 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய மைய பொறுப்பாளா் ராஜலிங்கம் கூறியதாவது: இந்த ஆராய்ச்சி நிலையத்தில் இரவில் வான்வெளி அண்டத்தை மக்கள் காணும் வகையில், சுற்றுலாச் சேவை தொடங்கப்பட்டது. மாதத்துக்கு இரண்டு முறை தொலைநோக்கி கருவி உதவியுடன் கோள்களை பாா்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

வருகிற 11,12-ஆம் தேதிகளில் இரவு 7 முதல் 9 மணி வரை தொலைநோக்கி கருவியின் மூலம் ஒன்ல்ண்ற்ங்ழ் மற்றும் ம்ா்ா்ய் பாா்ப்பதற்கு பிரத்யோகமாக தயாா் செய்யப்பட்டது. இதைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்பதிவு செய்ய ணத ஸ்ரீா்க்ங் வானிலை ஆராய்ச்சி நிலையம் அமைத்துள்ளது. மேலும், பகல் நேரங்களில் பாா்ப்பதற்கு முன்பதிவு செய்வதற்கு ஜ்ஜ்ஜ்.ண்ண்ஹல்.ழ்ங்ள்.ண்ய் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க