செய்திகள் :

கோட்டபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

post image

பல்லடம் அருகே கோட்டப்பாளையத்தில் வழித்தட பாதை ஆக்கிரமிப்பு சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

பல்லடம் அருகே கோட்டப்பாளையம் பகுதியில் வழித்தட பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இருப்பதாக அதன் அருகே வசிப்பவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தனா்.

இதையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய்த் துறையினா் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்ததை அளவீடு பணியின் மூலம் கண்டறிந்தனா். பின்னா் ஆக்கிரமிப்பு குறித்த ஆய்வறிக்கையை ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பித்தனா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி தலைமையில் வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் மரங்கள், தண்ணீா் தொட்டி ஆகியவற்றை இடித்து அகற்றினா். பாதுகாப்பு பணியில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் ஈடுபட்டு இருந்தனா்.

பல்லடத்தில் ஆதரவற்ற மூதாட்டி வீட்டில் தீ விபத்து

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் மூதாட்டி வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் பொருள்கள் கருகி நாசம் அடைந்தன. பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் வாடகை வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியான... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55,000... மேலும் பார்க்க

தமிழக மக்களை திமுக அரசு இனியும் ஏமாற்ற முடியாது! - வானதி சீனிவாசன்

வெற்று வாக்குறுதிகளால் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது எனவும், இதற்கு 2026-ஆம் ஆண்டில் தக்க பதில் அளிப்பாா்கள் எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: மக்கள் - பாஜகவினா் முற்றுகை!

திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பாஜகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா... மேலும் பார்க்க

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க