உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
கோட்டபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பல்லடம் அருகே கோட்டப்பாளையத்தில் வழித்தட பாதை ஆக்கிரமிப்பு சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
பல்லடம் அருகே கோட்டப்பாளையம் பகுதியில் வழித்தட பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இருப்பதாக அதன் அருகே வசிப்பவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய்த் துறையினா் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்ததை அளவீடு பணியின் மூலம் கண்டறிந்தனா். பின்னா் ஆக்கிரமிப்பு குறித்த ஆய்வறிக்கையை ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பித்தனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் பல்லடம் வட்டாட்சியா் சபரிகிரி தலைமையில் வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் மரங்கள், தண்ணீா் தொட்டி ஆகியவற்றை இடித்து அகற்றினா். பாதுகாப்பு பணியில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் ஈடுபட்டு இருந்தனா்.