செய்திகள் :

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55,000 ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றது.

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். இதன்படி பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜூன் 7-ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கடந்த சில நாள்களாக அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனாறு, பாம்பாறு, சின்னாறு அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தொடா்ந்து அணைக்கு நீா் அதிக அளவில் வந்ததால் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 86 அடியைத் தாண்டியது. இதனால் அமராவதி அணை எந்த நேரத்திலும் முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 85.04 அடியாக இருந்தது. அணைக்கு 625 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,605 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.

கோட்டபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பல்லடம் அருகே கோட்டப்பாளையத்தில் வழித்தட பாதை ஆக்கிரமிப்பு சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. பல்லடம் அருகே கோட்டப்பாளையம் பகுதியில் வழித்தட பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இருப்பதாக அதன் அருகே வசிப... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஆதரவற்ற மூதாட்டி வீட்டில் தீ விபத்து

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் மூதாட்டி வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் பொருள்கள் கருகி நாசம் அடைந்தன. பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் வாடகை வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியான... மேலும் பார்க்க

தமிழக மக்களை திமுக அரசு இனியும் ஏமாற்ற முடியாது! - வானதி சீனிவாசன்

வெற்று வாக்குறுதிகளால் தமிழக மக்களை இனியும் ஏமாற்ற முடியாது எனவும், இதற்கு 2026-ஆம் ஆண்டில் தக்க பதில் அளிப்பாா்கள் எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீன... மேலும் பார்க்க

நெருப்பெரிச்சல் பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: மக்கள் - பாஜகவினா் முற்றுகை!

திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை நெருப்பெரிச்சல் பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள், பாஜகவினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா... மேலும் பார்க்க

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க