உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55,000 ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு இந்த அணை குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றது.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீா் திறந்து விடுவது வழக்கம். இதன்படி பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஜூன் 7-ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருவதால் கடந்த சில நாள்களாக அமராவதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனாறு, பாம்பாறு, சின்னாறு அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தொடா்ந்து அணைக்கு நீா் அதிக அளவில் வந்ததால் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 86 அடியைத் தாண்டியது. இதனால் அமராவதி அணை எந்த நேரத்திலும் முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து அமராவதி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 85.04 அடியாக இருந்தது. அணைக்கு 625 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,605 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.