செய்திகள் :

கோவில்பட்டி கல்லூரியில் வளாக நோ்காணல்: 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்!

post image

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 31 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

புதுச்சேரி மதா்சன் குழுமத்தை சோ்ந்த நிறுவனமான சமவா்த்தனா மதா்சன் இன்னோவேடிவ் சொலுஷன் லிமிடெட் நிறுவனத்தினரால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இயந்திரவியல் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவா்களுக்கு வளாக நோ்காணல் நடைபெற்றது.

நிறுவனத்தின் மனிதவளத் துறை தலைவா் கண்ணன், அலுவலா் ஹேமா ஆகியோரால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

எழுத்து தோ்வு மற்றும் நோ்காணலில் வெற்றி பெற்ற லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 12 போ் உள்பட மொத்தம் 31 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை கே. ஆா். கல்வி நிறுவனங்களின் கல்லூரி தாளாளா் கே.ஆா். அருணாச்சலம் ஆலோசனையின்பேரில், கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் வழிகாட்டுதலில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவா் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

‘தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிப்புப் பணி: ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு’

தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் இயந்திர தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, ‘காஸ்மிக்போா்ட்’ என்ற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

மும்மொழிக் கல்வி கொள்கை: விக்கிரமராஜா கருத்து

மும்மொழிக் கல்வி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம் இல்லாமல் நிதியை வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா். திருச்செந்தூரில் செய்... மேலும் பார்க்க

2026இல் அதிமுக ஆட்சி அமைப்பதே இலக்கு: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன்

தமிழகத்தில் 2026இல் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முதல் இலக்காகக் கொண்டு கட்சியினா் செயல்படவேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன். தூத்துக்குயில் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன... மேலும் பார்க்க

சொத்துகளின் அசல் ஆவணங்கள் தொலைந்த விவகாரம்: விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்க வங்கிக்கு உத்தரவு

வீடு கடனுக்காக கொடுக்கப்பட்ட சொத்துகளின் அசல் ஆணவங்கள் தொலைந்த விவகாரத்தில், விஞ்ஞானிக்கு ரூ. 6.10 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை வங்கிக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

ஆதியாகுறிச்சி நிலம் கையக கருத்து கேட்புக் கூட்டம்: விவசாயிகள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆதியாகுறிச்சியில் விண்வெளி தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தல் தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தி வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செ... மேலும் பார்க்க

நுகா்வோருக்கு ரூ. 53,748 வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சோ்ந்தவருக்கு ரூ. 53,748 வழங்குமாறு தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. விளாத்திகுளத்தைச் சோ்ந்த பழனிச்சாமி ... மேலும் பார்க்க