செய்திகள் :

கோவை குற்றாலம் செல்ல இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை!

post image

கோவை: கோவை குற்றாலத்தில் சாலைப் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் வந்து ஏமாற வேண்டாம் என வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை நகர் பகுதியில் இருந்து மேற்கு பகுதியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கோவை குற்றாலம். இயற்கை எழில் சூழ்ந்த சிறுவாணி மலைத் தொடரின் அடிவாரத்தில் வனப்பகுதி நிறைந்த இடமாக இருப்பது கோவை குற்றாலம்.

நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் தினந்தோறும் அலை மோதுவது வழக்கம். இந்நிலையில் கோடை வெயில் காரணமாகவும், விடுமுறையின் பொழுது சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படும். ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இங்கு வந்தால் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தங்களது பொழுதை கொண்டாடி மகிழ்வார்கள். கோவை நகருக்கு அருகில் அமைந்து உள்ளதால் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.

கோடை வெயில் தற்பொழுது அதிகரித்துக் காணப்படுவதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் விடுமுறை நாள்கள் வர இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என வனத் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

இதனால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி செல்லும் சாலைப் பராமரிப்புப் பணிகளை தற்பொழுது வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக புதன்கிழமை ஏப்ரல் 9-ம் தேதி அன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை எனவும், மேலும் மறுநாள் வியாழக்கிழமை பத்தாம் தேதி அன்று வழக்கம் போல் வேலை நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என கோவை மாவட்ட வனத் துறையினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

எனவே இன்று அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற வேண்டாம் எனவும் வனத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற்போக்குத்தனமான விதிகளை மறுஆய்வு செய்த நீதித்துறைக்கு நன்றி: முதல்வர்

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தி... மேலும் பார்க்க

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவ... மேலும் பார்க்க

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!

ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடைகோரி, பகுஜன் சமாஜ் ... மேலும் பார்க்க

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க