செய்திகள் :

கோவை மருதமலை துணை ஆணையருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நோட்டீஸ்!

post image

தமிழில் யாக சாலை வேள்வி செய்ததற்கான ஆதாரங்கள், காணொளிப் பதிவுகளை மூன்று நா்ள்களுக்குள் வழங்க கோவை மருதமலை துணை ஆணையருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக் கூறி, இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் கோவை கோட்ட துணை ஆணையர் செந்தில் குமாருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சண்டிகேஸ்வர சேவா அறக்கட்டளையின் தலைவர் சுரேஷ்பாபு அறிவுறுத்தலின்படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், தமிழ் வேள்வி ஆசிரியை மற்றும் வேத விற்பன்னர்களைச் சமமாகக் கருதிட உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள துணை ஆணையர், உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், கோயில் நிர்வாகம் தமிழ் வேள்வி ஆசிரியைக்கு உரிய மரியாதை அளிக்கும் என்று உறுதியளித்து இருந்தார்.

மேலும், 36 யாகசாலை குண்டங்களில் 36 வேத தமிழ் அறிஞர்களைக் கொண்டு யாக சாலை வேள்வி நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி, மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் செயல்பட்டு உள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டி உள்ளார். குறிப்பாக, 31.03.2025 மற்றும் 02.04.2025 தேதிகளில் நடைபெற்ற வேள்வி வழிபாடுகளில் இந்த வாக்குறுதி மீறப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான வாக்குறுதியையும், நீதிமன்றம் பதிவு செய்த இடைக்கால உத்தரவையும் மீறியது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும், வேண்டுமென்றே பொறுப்பை மீறுவது நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் செயலாகும் என்றும் அந்த நோட்டீஸில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாகசாலை வேள்வி குண்டா நால்வுருவல் அதிக சத்தத்துடன் ஒலித்தது என்றும், 36 யாகசாலை குண்டங்களில் தமிழ் அறிஞர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தனது நேரடி ஆய்வில் கண்டு அறிந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி திட்டமிட்டு மீறப்பட்டு உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவே, 36 வேத தமிழ் அறிஞர்கள் 36 யாகசாலை குண்டங்களில் தமிழில் யாகசாலை வேள்வி செய்ததற்கான ஆதாரங்களையும், விடியோ பதிவுகளையும் இந்த அறிவிப்பைப் பெற்ற நாளிலிருந்து மூன்று நாள்களுக்குள் வழங்கும்படி துணை ஆணையருக்குத் தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் கோரி உள்ளது. அவ்வாறு வழங்கத் தவறினால், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பிற்போக்குத்தனமான விதிகளை மறுஆய்வு செய்த நீதித்துறைக்கு நன்றி: முதல்வர்

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தி... மேலும் பார்க்க

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவ... மேலும் பார்க்க

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!

ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடைகோரி, பகுஜன் சமாஜ் ... மேலும் பார்க்க

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க