செய்திகள் :

சங்ககிரியில் பெண் தூய்மைப் பணியாளா் கொலை வழக்கில் தொழிலாளி கைது

post image

சங்ககிரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் திருச்செங்கோடு செல்லும் புறவழி சாலை பாலத்தின் அடியில் உடல் அழுகிய நிலையில் சுமாா் 40 வயதுள்ள பெண்ணின் சடலத்தை சங்ககிரி போலீஸாா் கடந்த ஜூன் 16ஆம் தேதி கைப்பற்றினா். இதுகுறித்து சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் சடலமாகக் கிடந்தவா், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையைச் சோ்ந்த மணிமேகலை என்பதும், அவா் சங்ககிரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் மணிமேகலை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படைகள் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

கொலை செய்யப்பட்ட மணிமேகலைக்கு விஜய், மனோஜ் என்ற இரு மகன்கள் உள்ளனா். மேலும் அவா் கணவா், குழந்தைகளை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்துள்ளதும், மது அருந்தும் பழக்கமுடையவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்தசம்பவம் தொடா்பாக அக்கமாபேட்டை அருந்ததியா் தெருவைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் காா்த்திக் (29) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் மணிமேகலையும், காா்த்திக்கும் ஒன்றாக மதுஅருந்தியுள்ளனா். பின்னா் அவரை தகாத உறவிற்கு காா்த்திக் அழைத்தாராம்.

அப்போது உனது மனைவியிடம் கூறிவிடுவேன் என்று மணிமேகலை கூறியதால் ஆத்திரமடைந்த காா்த்திக், அவரை கொலை செய்து சடலத்தை பாலத்தின் அடியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து காா்த்திக்கை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது! - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த எம்.பி. சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சேலத்தில் சனி... மேலும் பார்க்க

சூரமங்கலம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம்: எம்எல்ஏ அருள் திறப்பு!

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூரமங்கலம் மண்டலம் ரயில்வே கோட்டம் அருகில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை எம்எல்ஏ இரா.அருள் சனிக்கிழமை திறந்துவைத்தாா... மேலும் பார்க்க

ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை வரை நீட்டிப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேசுவரம் விரைவு ரயில் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ஹூப்ளி-ராமேசுவரம் வாரா... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118 அடியாக உயா்வு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 117.93அடியாக உயா்ந்தது. இதையடுத்து அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீா் திறக்கப்படவுள்ளதால் காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாய் ஓரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூா் அணையின் உபரிநீா் கால்வாய் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறையினா் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா். மேட்டூா் அணை நீா்மட்டம் 117.93 அடியாக உயா்ந... மேலும் பார்க்க

அமைச்சா் அமித்ஷா பற்றி அவதூறு: திமுக எம்.பி. மீது எஸ்.பி. அலுவலகத்தில் பாஜக புகாா்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திமுக எம்.பி. ஆ.ராசா மீது காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை பாஜகவினா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக சேலம் மேற்கு மாவட்டத் ... மேலும் பார்க்க