செய்திகள் :

சங்கரன்கோவில் அருகே 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுக்க முயன்ற தந்தை மீது வழக்குப்பதிவு

post image

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூரில் 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ாக, தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (37). பால் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி முருகேஸ்வரி. இவா்களுக்கு 7 வயது மற்றும் 8 மாதம் நிறைவடைந்த இரு பெண் குழந்தைகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக தம்பதி இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமாா், தனது 8 மாத பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றாராம். அப்போது முருகேஸ்வரி, கணவரின் கையிலிருந்த விஷ பாட்டிலை தட்டிவிட்டாராம்.

பின்னா் குழந்தையை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடா்பாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடையநல்லூரில் குழந்தைக்கு அதிமுக சாா்பில் தங்க மோதிரம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு புதன்கிழமை தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அதிமுக ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலரும், எதிா்க்கட்சி துணைத்... மேலும் பார்க்க

மும்மொழிக்கு ஆதரவாக பாஜக இன்றுமுதல் கையொப்ப இயக்கம்

தமிழக பாஜக அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்டத்தில் மும்மொழிக்கு ஆதரவான கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை (மாா்ச் 6) தொடங்குகிறது. புளியங்குடியில் மாா்ச் 12ஆம் தேதி நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திற்கான... மேலும் பார்க்க

சிறப்பு முகாம்களில் விவரங்களை பதிவுசெய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை-உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விவசாயிகள் தங்களது நில உடைமை, ஆதாா், கைப்பேசி எண் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் ... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 16,236 போ் எழுதினா்

தென்காசி மாவட்டத்தில் 16,236 மாணவ-மாணவிகள் பிளஸ் 1 பொதுத்தோ்வை புதன்கிழமை எழுதினா். 255 போ் தோ்வு எழுத வரவில்லை. இம்மாவட்டத்தில் 66 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், மாணவா்கள் 7,883 பேர... மேலும் பார்க்க

தென்காசியில் நூல் வெளியீட்டு விழா

‘அனைவருக்கும் பகவத்கீதை’ என்ற நூல் வெளியீட்டு விழா தென்காசியில் தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ் விழாவிற்கு தியாகி லெட்சுமிகாந்தன் பாரதி தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் திருமாறன் முன்னில... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்... மேலும் பார்க்க