செய்திகள் :

சட்டப்படி, கையில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?

post image

இந்திய நாட்டின் சட்டப்படி, ஒருவர் வீட்டில் அலுவலகத்தில் ரொக்கமாக எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதில் உண்மை என்ன?

செய்தியை தொடர்ந்து வாசிக்கும் அல்லது கேட்பவர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கேட்டிருப்போம். அதுதான் வீட்டில் அதிரடி சோதனை, ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது என்ற செய்தி.

வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி பணத்தைக் கைப்பற்றினர் என்பது போன்ற செய்திகளைப் பார்க்கும் ஒருவருக்கு, நாட்டில் சட்டப்படி, ரொக்கமாக வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிகபட்சமாக எவ்வளவுதான் பணம் வைத்திருக்கலாம் என்ற கேள்வி எழுந்திருக்கலாம்.

ஒருவர் கையில் ரொக்கமாகப் பணம் வைத்திருப்பது குறித்து விதி உள்ளதா? இருந்தால் அது சொல்வது என்ன? என்பது பற்றி பார்த்தால், அப்படி ஒரு உச்ச வரம்பே இல்லை.

உண்மை என்னவென்றால், அவ்வாறு வீட்டில், அலுவலகத்தில் அல்லது கையில் ரொக்கப் பணமாக வைத்திருக்க எந்தக் கட்டுப்பாடும், விதிமுறையும் இல்லை என்பதே.

உண்மையான நிலவரம் தெரியாமலேயே பலரும் கையில் பணம் வைத்திருந்தாலே அதனை பறிமுதல் செய்துவிடுவார்கள என்று கூட கருத முடியும்.

ஆனால், வீட்டிலோ, கையிலோ அலுவலகத்திலோ ரொக்கப் பணம் வைத்திருக்க எந்த உச்ச வரம்பும் கிடையாது. ஒருவர் இவ்வளவுதான் ரொக்கமாக வைத்திருக்க வேண்டும் என்று வருமான வரித்துறையும் எதையும் வரையறை செய்யவில்லை.

பணம் எவ்வளவு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்றால் பறிமுதல் செய்யப்படுவது ஏன் என்பதுதானே கேள்வி? அதற்குக் காரணம், அந்தப் பணம் எந்த வழியில் வந்தது. நேர்மையாக ஊதியமாக, சொத்து விற்றது என பணம் வந்த நேர்மையான வழிதான் முக்கியம். ஒருவேளை, ஒருவரிடம் பணம் இருந்து அது பறிமுதல் செய்யப்பட்டால் அது எந்த வழியில் சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளித்து ஆதாரங்களை சமர்ப்பித்தால் பணம் முழுமையாக அவரிடமே திரும்ப ஒப்படைக்கப்படும்.

பணம் ஆதாரம்தான் அடிப்படை

பணம் சம்பாதிக்கப்பட்டது எப்படி என்று தெரிவிக்கப்படாத வருவாய் அல்லது சொத்துகள் தொடர்பாக விளக்குகிறது வருமான வரிச் சட்டப் பிரிவு 68 மற்றும் 69பி.

ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் அல்லது சொத்து விவரம் பற்றி அவரால் விளக்க முடியாவிட்டால் அது வருவாய்க்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தாகக் கருதப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். அந்த அபராதத் தொகை 78 சதவீதம் வரை இருக்கலாம்.

என்ன, 500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா? ஆர்பிஐ அறிவிப்பால் குழப்பம்!

புது தில்லி: விரைவில் ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200 தாள்கள் அதிகம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆர்பிஐ அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ரூ.2,000-ஐப் போல, 500 ரூபாய் நோட்டும் திரும்பப் பெறப்படுமா... மேலும் பார்க்க

இ-சிகரெட் பாதுகாப்பானது இல்லையா? புகைப்பிடிப்பதை நிறுத்த உதவாதா?

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கான ஒரு உபாயமாக, இ-சிகரெட் தோல்வியே அடைந்திருப்பதாக மருத்துவர் நீது ஜெயின் தெரிவித்துள்ளார்.தில்லியில் உள்ள பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனையின் நுரையீரல் அவசர சிகிச்சை மற்றும் உறக்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் வேண்டுமென்றே ஏவப்பட்டதா பிரம்மோஸ்? எலி போல பாகிஸ்தான்!

மே 6-7ஆம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்திய ராணுவம், பாகிஸ்தான... மேலும் பார்க்க

நம்பினால் நம்புங்கள்! பாம்பு கடித்து 58 முறை இறந்த 2 பேர்: இது மத்திய பிரதேச முறைகேடு!!

போபால்: பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தில் பல கோடி ரூபாய் அரசுப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளதும், இதற்காக இரண்டு பேர் 58 முறை பாம்பு கடித்து இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி? போர் நிபுணர் அளித்திருக்கும் மாஸ் விளக்கம்!

புது தில்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர், மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக, போர் ... மேலும் பார்க்க