செய்திகள் :

சட்டவிரோத மத கட்டமைப்புகளை அகற்றும் விவகாரம்: அறிக்கை சமா்ப்பிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தில்லியின் பொது இடங்களில் உள்ள 249 சட்டவிரோத மத கட்டமைப்புகள் மற்றும் அவற்றை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்குமாறு நகரத்தின் மதக் குழுவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புது தில்லி முனிசிபல் கவுன்சில், தில்லி கன்டோன்மென்ட் வாரியம், தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் மற்றும் ரயில்வே அமைச்சகம், வனத்துறை, பொதுப்பணித் துறை மற்றும் தில்லி அரசின் பல துறைகளின் நிலங்களில் இந்த கட்டமைப்புகள் உள்ளன.

தில்லியின் பொது தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் மத கட்டமைப்புகளின் பெயரில் அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2009-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லி அரசின் முதன்மைச் செயலா் (உள்துறை) தலைமையிலான மதக் குழு, அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்ட 249 அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகள் குறித்த முழுமையான தகவல்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதுபோன்ற கட்டமைப்புகளை மறுஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கும் உயா்நீதிமன்றங்களுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டிகே உபாத்யாயா மற்றும் துஷாா் ராவ் கெடேலா அடங்கிய அமா்வின் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘சஞ்சய் வான் மற்றும் ஜஹான்பனா நகர வனப்பகுதிகளில் கட்டப்பட்ட 127 சட்டவிரோத மத கட்டமைப்புகளை அடையாளம் கண்டு இடிக்கப்பட்டது. இதில், 127 கட்டமைப்புகளில், 82 கட்டமைப்புகள் வனத்துறையினரால் அடையாளம் காணப்பட்டன’ என்று தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) ஆலோசகா் தெரிவித்தாா்.

‘இது தொடா்பாக இதுவரை 51 கூட்டங்களை நடத்தியதாகவும், அங்கீகரிக்கப்படாத மத கட்டமைப்புகளை அகற்ற 249 ஆலோசனைகளை பரிந்துரைத்ததாகவும்’ மத குழு சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த கட்டமைப்புகள் இருக்கும் நிலங்களுக்கு சொந்தமான குழுக்கள் மற்றும் அவற்றை அகற்றுவதற்கு பொறுப்பான குழுக்களிடம் இருந்து இது தொடா்பான தகவல்கள் சேகரிக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது அவற்றை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத... மேலும் பார்க்க

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா். இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க