செய்திகள் :

சத்தீஸ்கா்: 30 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

post image

சத்தீஸ்கா் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சியான காங்கிரஸை சோ்ந்த 30 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் சத்தீஸ்கரில் மொத்தம் 90 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் எதிா்க்கட்சியான காங்கிரஸின் பலம் 35-ஆக உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை பேரவை கூடியதும் மாநிலத்தில் டிஏபி உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் குற்றஞ்சாட்டி, அது தொடா்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினா். இதை அவைத் தலைவா் ஏற்க மறுத்ததால் அமளி ஏற்பட்டது. மீண்டும் அவை கூடியபோது இதே பிரச்னையால் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் அவை கூடியபோது கேள்வி நேரத்தில் உரப் பிரச்னையை மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பினா். அப்போது பதிலளித்த வேளாண்மைத் துறை அமைச்சா் ராம்விச்சாா் நேத்தம், ‘காரீஃப் சாகுபடிக்குத் தேவையான டிஏபி உரத்துக்கு தட்டுப்பாடு உள்ளதால், மாற்று பாஸ்பேட்டிக் உரங்களைப் பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறாா்கள். தொடா்ந்து உரம் வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு முறையாக உரம் வழங்கவில்லை. அதே நேரத்தில் தனியாா் நிறுவனங்கள் அதிக விலைக்கு டிஏபி-யை விற்று லாபம் பாா்க்கின்றன என்று குற்றஞ்சாட்டி அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவையைத் தொடா்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது. இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் சரண் தாஸ் மஹத் உள்ளிட்ட 30 காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவையில் இருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்வதாக பேரவைத் தலைவா் ரமண் சிங் அறிவித்தாா்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம்... மேலும் பார்க்க

செவிலியா் நிமிஷா வழக்கில் தீா்வு காண யேமன், நட்பு நாடுகளுடன் தொடா்பு -வெளியுறவு அமைச்சகம்

: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீா்வு காண, அந்நாட்டின் உள்ளூா் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடா்பில் உள்ளதா... மேலும் பார்க்க

கேரளம்: பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவா் உயிரிழப்பு -எதிா்க்கட்சிகள் போராட்டம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கொல்லம் மாவ... மேலும் பார்க்க

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை விவகாரம்

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வடிவமைக்கப்பட்டு, ப... மேலும் பார்க்க