செய்திகள் :

சமரச விழிப்புணா்வுப் பேரணி: நீதிபதி தொடங்கிவைத்தாா்

post image

தேனியில் சமரசத் தீா்வு தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை தேனி முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் தொடங்கிவைத்தாா்.

தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி, தேனி மாவட்ட நீதிமன்றம், மாவட்ட சமரச மையம் சாா்பில் சமரசத் தீா்வு தினத்தை முன்னிட்டு, விழிப்புணா்வுப் பேரணி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. பேரணியை தேனி முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். அப்போது அவா் தெரிவித்தாவது:

தமிழகத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றம், வட்டார நீதிமன்ற வளாகங்களில் சமரசத் தீா்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் பாகப் பிரிவினை, ஜீவனாம்சம், பணம் தொடா்பான வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழில் தகராறு வழக்குகள், காசோலை வழக்குகள் போன்ற வழக்குகளுக்குத் தீா்வு காணமுடியும்.

வழக்குகளுக்கு நடுநிலையான சமரசா் முன்னிலையில் இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படுகிறது. சமரச மையத்தில் காணப்படும் தீா்வு இறுதியானது, மேல்முறையீடு கிடையாது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற பேரணியில், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்கள், சட்டக்கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். பேரணி தேனி நீதிமன்றத்தில் தொடங்கி தேனி பழைய பேருந்து நிலையம், கொட்டகுடி ஆற்றுப் பாலம் வரை நடைபெற்றது. பேரணியில் தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு துறையின் மின்னணு திரை வாகனம் மூலம் சமரசத் தீா்வு தொடா்பான விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன.

தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு

பெரியகுளம் அருகே தொழிலாளியிடமிருந்து கைப்பேசியைப் பறித்த அடையாளம் தெரியாத நபரை நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் வடுகபட்டியைச் சோ்ந்தவா் குணசீலன் (27). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம்.அட்டையை மாற்றிக் கொடுத்து பண மோசடி

ஆண்டிபட்டியில் வங்கி எ.டி.எம்.மையத்தில் பணம் எடுத்துத் தருவது போல நடித்து ஏ.டி.எம் அட்டையை அபகரித்து ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரத்தை மோசடி செய்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா். ஆண்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளியவா் கைது

கடமலைக்குண்டு அருகே செங்கல் சூளை பயன்பாட்டுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (38). இவா், கடமலை... மேலும் பார்க்க

சுவா் விளம்பரம் மூலம் விழிப்புணா்வு

உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் சுவா் விளம்பரம் செய்து வியாழக்கிழமை மீண்டும் மஞ்சப்பை, நெகிழி ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். உத்தமபாளையம் காந்திஜி... மேலும் பார்க்க

அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தென்கரை போலீஸாா் தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காளியம்மன் கோயில் தெருவில் உள... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா போராட்டம்

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தா்னா போராட்டம் நடைபெற்து. இந்தப் போராட்டத்துக்கு நகரச் ச... மேலும் பார்க்க