செய்திகள் :

வங்கி ஏ.டி.எம்.அட்டையை மாற்றிக் கொடுத்து பண மோசடி

post image

ஆண்டிபட்டியில் வங்கி எ.டி.எம்.மையத்தில் பணம் எடுத்துத் தருவது போல நடித்து ஏ.டி.எம் அட்டையை அபகரித்து ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரத்தை மோசடி செய்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை, வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள தி.சுப்புலாபுரம், தி.புதூரைச் சோ்ந்தவா் சேகா் (44). இவா், வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றாா். கடன் தொகை தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதை தெரிந்து கொள்வதற்காக ஆண்டிபட்டியில் மதுரை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.மையத்துக்குச் சென்றாா். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்தத் தெரியாததால், பணம் எடுக்க வந்த ஒருவரிடம் தனது ஏ.டி.எம். அட்டையைக் கொடுத்து தனது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதான என பாா்க்கச் சொன்னாராம்.

சேகரின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அந்த நபரிடம் தனக்கு ரூ.10 ஆயிரம் எடுத்துத் தருமாறு கூறினாா். அந்த நபா் சேகருக்கு ரூ.10 ஆயிரம் எடுத்துக் கொடுத்து விட்டு, அவரது ஏ.டி.எம். அட்டையை அபகரித்துக் கொண்டு அதற்குப் பதிலாக வேறு அட்டையைக் கொடுத்துவிட்டுச் சென்றாா்.

பின்னா், அந்த நபா் சேகரின் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி தேனி அல்லிநகரத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் ரூ.30 ஆயிரத்தை எடுத்தும், போடியில் உள்ள நகைக் கடையில் ரூ.75 ஆயிரத்துக்கு தங்க நகை வாங்கியும் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசடியில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.

மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கம்பம் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம்-புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (72). இவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்த... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா... மேலும் பார்க்க

தேனி அருகே கஞ்சா கடத்திய மூவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவா், உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வருஷநாடு சாலையில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில்,... மேலும் பார்க்க