செய்திகள் :

சமூக ஊடக பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: மத்திய அரசு பரிசீலனை

post image

சமூக ஊடக தளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

‘சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் சாடிய நிலையில், இந்தக் கருத்தை மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னாவின் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபா் ரண்வீா் அல்ஹாபாதியா, பெற்றோா் மற்றும் உடலுறவு தொடா்பான பாா்வையாளா் ஒருவரின் கேள்விக்கு சா்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தாா். இந்த நிகழ்ச்சியின் காணொலி சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி, பெரும் சா்ச்சையானது.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘சமூக வலைதளங்களில் அனைத்து விதமான விஷயங்களும் நடைபெறுகின்றன. இதுபோன்ற யூடியூபா்கள் மற்றும் அவா்களின் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்தாக வேண்டும். சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த சட்டத்தில் வெற்றிடம் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நீதிமன்றம் அதை சாதாரணமாக விட்டுவிடாது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள தகவல்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மீதான நாடாளுமன்ற நிலைக் குழு, சமூக ஊடக தளங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உருவெடுத்து வரும் சூழலில், சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த நடைமுறையில் உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடா்பாக மத்திய அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது.

இதற்கு மத்திய அமைச்சகம் எழுத்துபூா்வமாக சனிக்கிழமை பதிலளித்தது. அதில், ‘சமூக வலைதளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்பட்டு கருத்துச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படும் விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதை ஒழுங்குபடுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் மற்றும் புதிய சட்ட நடைமுறைகளைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது’ என்று மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக் குழு பிப். 25-ஆம் தேதி மீண்டும் கூடி இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. அதன் பிறகு, இதுதொடா்பான விரிவான அறிக்கையை அக் குழு நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கும்.

தெலங்கானா சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரின் நிலை என்ன? முழுவீச்சில் மீட்புப் பணிகள்!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன... மேலும் பார்க்க

சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலி!

தில்லியில் சிறுவன் இயக்கிய கார் மோதி குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு தில்லியின் அலிபூர் பகுதியில் சாரதி என்ற 15 வயது சிறுவன் காரை இயக்கியதுடன், அர்ஜூன் என்ற 18 மாதக் குழந்தையின... மேலும் பார்க்க

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க