செய்திகள் :

சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு: தாக்குதல் நடத்த சதி! -என்ஐஏ விசாரணை

post image

பயங்கரவாத அமைப்புகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகொண்டு, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்படுவது குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக, தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் என்ஐஏ திங்கள்கிழமை (செப். 8) சோதனை நடத்தியது. பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாட்டில் மொத்தம் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இன்று (செப். 9) அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் முகமது அக்லதூர் முஜாஹித் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

பாகிஸ்தான், சிரியாவைச் சேர்ந்த பல முக்கிய குழுக்களுடன் அவருக்கு தொடர்பிருந்ததும், சமூக ஊடக வலைதளங்கள் வழியாக அவர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருந்ததும் என்ஐஏ விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

NIA conducts multi-state raids to probe ISIS-linked terror conspiracy case

அயோத்தி கோயில் குறித்து பெருமையடையாதவர் இந்தியரா? யோகி ஆதித்யநாத்!

அயோத்தி ராமர் கோயில் குறித்து ஒருவர் பெருமையடையவில்லை என்றால், அவர் இந்தியர் என்பதே சந்தேகம்தான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். கோராக்நாத் கோயில் வளாகத்தில், இன்று (செப்.10) ... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்? அக்டோபரில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்டோபர் மாதத்தின் எந்த நாளிலும் பணிகளைத் தொடங்க தயாராக இருக்குமாறு இந்திய த... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானியர் வெளியேற்றம்!

ஹைதராபாத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் அவரது தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான் (எ) முஹம்மது அப்பாஸ் இக்ர... மேலும் பார்க்க

குஜராத் முதல்வருடன் இஸ்ரேல் நிதியமைச்சர் சந்திப்பு!

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இஸ்ரேல் அரசின் வலது சாரி நிதியமைச்சர் பெசால... மேலும் பார்க்க

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்து அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் போராட்டம் நடத்தினார்.காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

நேபாளத்தில் வெடித்துள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகரான காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேபாள அரசுக்கு எதிராக, ஜென்-ஸி என அழைக்கப்படும் ... மேலும் பார்க்க