செய்திகள் :

குஜராத் முதல்வருடன் இஸ்ரேல் நிதியமைச்சர் சந்திப்பு!

post image

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இஸ்ரேல் அரசின் வலது சாரி நிதியமைச்சர் பெசாலெல் ஸ்மோட்ரிச், அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். மத்திய அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், இன்று (செப்.10) குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேல் அதிகாரிகள் குழுவுடன் வந்துள்ள ஸ்மோட்ரிச், பாரம்பரியம், கலாசாரம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா, குஜராத் மற்றும் இஸ்ரேல் இடையில் ஒற்றுமை உள்ளது எனவும் வருங்காலத்தில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் அதிகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு வர வேண்டும் என்பது தனது நீண்டகால விருப்பம் என அமைச்சர் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.

மேலும், குஜராத்தின் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், செயல்பாடுகளை அமைக்கும் இஸ்ரேலிய நிதி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் யூபிஐ அமைப்பு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

இத்துடன், இஸ்ரேல் அமைச்சருடன் வருகை தந்த குழுவை வரவேற்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளது எனவும், அந்த உறவுகள் பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுறவுக் கொள்கைகளின் அடிப்படையில் உருவானவை எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை விமர்சிக்கும் சாம்சங்!

Israeli Finance Minister Bezalel Smotrich, who is on a state visit to India, met and held talks with Gujarat Chief Minister Bhupendra Patel.

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு

இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா். அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு?

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் வி... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: ‘புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை’

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வ வாரிய... மேலும் பார்க்க

பொய் செய்திகளை தடுக்க கடுமையான தண்டனை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

பொய்யான செய்திகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் மற்றும் தண்டனைகள் விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்... மேலும் பார்க்க