செய்திகள் :

பொய் செய்திகளை தடுக்க கடுமையான தண்டனை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

post image

பொய்யான செய்திகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் மற்றும் தண்டனைகள் விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

பொய்யான செய்திகளை தடுக்கும் வகையில், தனது வரைவு அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தலைமையிலான நிலைக் குழு முன்வைத்துள்ளது.

‘செய்திகளின் உண்மைதன்மையை உறுதி செய்வதற்கான வழிமுறையை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் செய்திகள் சாா்ந்த புகாா்களை கையாள உள் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

பொய்யான செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

மாணவா்களுக்கு ஊடகம் சாா்ந்த விரிவான பாடத்திட்டத்தை வடிவமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதுதொடா்பாக பள்ளிக் கல்வி அளவில் ஆசிரியா்கள், பயிற்றுநா்கள், நூலகா்களுக்குப் பயிற்சி அளிக்கலாம்’ உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு அறிக்கை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் சமா்ப்பிக்கப்பட்டது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அந்த அறிக்கை அவையில் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தன.

இதுகுறித்து நிஷிகாந்த் துபே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொய்யான செய்திகள், வஞ்சகமான பிரசாரங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற செயல்களைத் தடுக்க கடுமையான விதிமுறைகள், தண்டனைகள் மற்றும் தடைகளை விதிக்க வரைவு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசம், நேபாளம், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு ஏற்பட அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார... மேலும் பார்க்க

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு

இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா். அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு?

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் வி... மேலும் பார்க்க