செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கனுக்காக விளையாட விரும்பும் முகமது நபி!

post image

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட விரும்புவதாக அந்த அணியின் மூத்த வீரர் முகமது நபி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க:பும்ரா இல்லாதது வங்கதேச அணிக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு: முன்னாள் வீரர்

விளையாட விரும்பும் முகமது நபி

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட விரும்புவதாக அந்த அணியின் மூத்த வீரர் முகமது நபி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய எதிர்காலம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான் அணிக்காக நான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டிகளாக இருக்காது என நினைக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த பிறகும், சில ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். இது குறித்து மூத்த வீரர்களிடம் ஆலோசனை செய்துள்ளேன். நான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது எனது உடல் தகுதியை பொருத்தே அமையும் என்றார்.

ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரரான முகமது நபிக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் பேட்டிங்!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்க... மேலும் பார்க்க

தோல்விக்கு காரணம் என்ன? பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் பதில்!

முதல் போட்டியில் தோல்வியுற்றது குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டியளித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந்தப் ப... மேலும் பார்க்க

சொந்த அணியை நம்பாத வருண் சக்கரவர்த்தி..! மனம் திறந்த ரோஹித் சர்மா!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பந்துவீச்சு நுணுக்கங்களை சொந்த அணியிடம்கூட காண்பிப்பதில்லை எனக் கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டி... மேலும் பார்க்க

ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுக்கும் க்ளென் பிலிப்ஸ்..! வைரலாகும் கேட்ச் விடியோ!

நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸ் ஒரு நாளைக்கு 800 புஷ்-அப்ஸ் எடுப்பாரென வர்ணனையாளர் சைமன் டவுல் கூறியுள்ளார்.சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்... மேலும் பார்க்க

இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் வியாழக்கிழமை (பிப். 20) துபையில் சந்திக்கின்றன.இந்திய அணியை பொருத்தவரை, அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: வெற்றியுடன் தொடங்கியது நியூசிலாந்து!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. மேலும் பார்க்க