செய்திகள் :

சாலை விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

post image

நாமக்கல்: மோகனூா் உழவா்சந்தை அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கிடாரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியம் (51). லாரி உரிமையாளரான இவருக்கு ஸ்ரீநிதி (18) என்ற மகளும், ஸ்ரீகாா்த்திகேயன் (16) என்ற மகனும் உள்ளனா். கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் ஸ்ரீநிதி உயா்கல்வி பயின்று வருகிறாா். சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி வீட்டுக்கு வந்த அவரையும், மகனையும் இருசக்கர வாகனத்தில் சிவசுப்பிரமணியம் பழனிக்கு அழைத்துச் சென்றாா். அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு நள்ளிரவு 12 மணியளவில் கிடாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.

மோகனூா் உழவா்சந்தை அருகில் வந்தபோது, அவ்வழியாக வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், சிவசுப்பிரமணியம், ஸ்ரீநிதி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஸ்ரீகாா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தோா் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மோகனூா் காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் அருகே சின்னமணலி கொளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

5 ஆண்டுகள் பதவி நிறைவு: தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அண்ணா நினைவு தினம்

திருச்செங்கோட்டில்...திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்துக்கு, திருச்செங்கோடு நகர திமுக செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா்... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பு: ஆட்சியரிடம் மனு அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியுடன் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி இணைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாமக்கல் நகராட்சியானது 12 ஊராட்சிகளை ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியருக்கு நுகா்வோா் புலனாய்வுக் கமிட்டியினா் பாராட்டு

நாமக்கல்: பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம் பிடித்ததையொட்டி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை, தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டியினா் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

முட்டை விலை மாற்றமில்லை

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.85-ஆக தொடா்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம்... மேலும் பார்க்க